“திரும்பி போ” சொல்லாவிட்டால் அவர் போகாமல் இங்கே தங்கிவிடுவாரா?
“மோடியே திரும்பி போ..”
இப்படி பல குரல்கள் வருகின்றன, அவர் திரும்பி போகத்தான் போகின்றார். இவர்கள் “திரும்பி போ” சொல்லாவிட்டால் அவர் போகாமல் இங்கே தங்கிவிடுவாரா?
அவர் இங்கே தங்கும் அளவிற்கா இருக்கின்றது தமிழ்நாடு? பாலும் தேனுமா ஆடுகின்றது?
கொஞ்ச நேரத்தில் திரும்பி செல்ல வந்திருப்பவரை பார்த்து “திரும்பி போ, திரும்பி போ..” என கத்திகொண்டே இருக்கின்றார்கள்
“நான் திரும்பி போகத்தானே போகின்றேன், பின்னும் ஏன் கத்திகொண்டே இருக்கின்றார்கள்?” ஒரு மாதிரியானவர்கள் போல என குழம்பி தவிக்கின்றார் மோடி