தமிழக வழக்கறிஞர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்?
அரசியல்வாதிகள்தான் சரியில்லை, எல்லாம் நேரத்திற்கொன்று பேசிகொண்டிருக்கும் இந்த தமிழக வழக்கறிஞர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்?
வைகோ , திருமா என ஏகபட்ட வழக்கறிஞர் அரசியல்வாதிகள் உண்டு. ஆனால் யாராவது கோர்ட்டில் காவேரிக்காக வாதாடினார்கள் அல்லது முயற்சி செய்தார்கள் என்றால் இல்லை
கருப்பு கவுண் அணிந்து கோர்ட்டில் வழக்காட வேண்டியவர்கள், கருப்புகொடி பிடித்து தெருவில் உருளுகின்றார்கள்
திமுகவிலும் வழக்கறிஞர்கள் உண்டு, ஆ.ராசா போன்றோர் உண்டு. ஆனால் அவர்கள் தங்கள் வழக்கிற்கு மட்டும் வாதாடிகொள்வதாக சத்தியம் செய்கின்றார்கள்
எப்படிபட்ட வழக்கறிஞர்கள் எல்லாம் தமிழகத்தில் இருந்தார்கள்?
ராஜாஜி, எத்திராஜ் என லண்டன் கோர்ட்டையே கலங்கடித்த தமிழர்கள் இருந்த பூமி இது
இன்று உருப்படியாக ஒரு வழக்கறிஞரும் இல்லை. இருப்பவர்களிடமும் பொதுநலம் என்பது சுத்தமாக இல்லை
அரசியலில் வழக்கறிஞர்கள் புகுந்து அரசியல்வாதியாய் மாறிப்போனது இம்மாநிலத்தின் பெரும் வீழ்ச்சி
சீமானை விடுதலை செய்ய கோரி மன்சூர் அலிகான், சுப உதயகுமார் போராட்டம்
அங்கிள் சைமன் வெளிவரமுடியாது, கொலைமுயற்சிக்கு திட்டமிட்டு கொடுத்தோர், வெப்பன் சப்ளையர் என ஏதேனும் பிரிவில் இவர்களை உள்ளே தள்ளலாம்