இட ஒதுக்கீட்டை மறுபரீசீலனை செய்தே தீரவேண்டும்
“இட ஒதுக்கீடு இன்று தாழ கிடக்கும் குடும்பங்களை மேலே கொண்டுவரை செய்யபடும் முயற்சி. இது 3 தலைமுறைக்கு மேல் தொடர்ந்தால் குறிப்பிட்ட இனமே தொடர்ந்து மே. எழும், மற்ற இனங்களுக்கு அவை சிக்கலை ஏற்படுத்தும்
தாழ கிடக்கும் மக்கள் மேலேழும்பி வர இது ஒரு வாய்ப்பு, அப்படி எழும்பிவிட்டால் பின்னாளில் இட ஒதுக்கீட்டால் மட்டும் அவர்கள் வாழும் வாய்ப்பு இராது, எல்லா வாசலும் திறந்திருக்கும்
அதனால் கொஞ்சகாலத்திற்கு பின் இட ஒதுக்கீட்டை மறுபரீசீலனை செய்தே தீரவேண்டும்”
அம்பேத்கரின் இந்த கருத்துத்தான் அவர் மாபெரும் அறிவாளியும் தீர்க்கதரிசனமுமான மனிதர் என்பதை சொல்ல வைக்கின்றது
நிச்சயம் இக்காலம் இடஒதுக்கீட்டை மறுபரிசிலனை செய்யும் காலம் அல்ல என்றாலும் விரைவில் அதனை செய்தே தீரவேண்டும்
எக்காலமும் இடஒதுக்கீடு நிரந்தரமாக உண்டு என்பதெல்லாம் பெரும் குழப்பங்களை கொடுக்கும் என்பது அம்பேத்கரே உணர்ந்த விஷயம்
அதெல்லாம் நிரந்தரமாய் இருக்கவேண்டும் என சொன்னால் 6ம் நூற்றாண்டின் காட்டுமிராண்டி மனிதர்களுக்கு நபிபெருமான் சொன்ன சில விஷயங்கள் இன்றும் பொருந்தும் என ஆளும் ஆப்கன் போன்ற காட்டுமிராண்டிகளுக்கும் அவர்களுக்கும் வித்தியாசமே இல்லை
எல்லா விஷயங்களும் காலத்தை பொருத்தே வரும், காலத்தை பொறுத்தே மாறும்