சிரியா போர்க்களம் ….
சிரியாவில் ரஷ்ய ஆயுதம் எப்படி வேலை செய்யும் என சோதிக்க அட்டகாச யுத்திகளை பயன்படுத்தியிருக்கின்றது அமெரிக்க கோஷ்டி
ஆளில்லா விமானங்களை பயன்படுத்தித்தான் தாக்குதல் நடத்தும் திட்டம் இருந்தது, ஆனால் உக்ரைன் போரிலே மேல்நாட்டு டிரோன்களை ஜாம் செய்யும் நுட்பம் ரஷ்யரிடம் இருந்ததால் அதனை அனுப்பவில்லை
நள்ளிரவில் திடீரென புகுந்து குண்டுகளை வீசிவிட்டு வந்தன விமானங்கள், அதன் பின் விழித்துகொண்டது சிரிய தரப்பு
இதன்பின் நிலமையினை சோதிக்க அமெரிக்க தரப்பு ஏவுகனைகளை வீசியிருக்கின்றார்கள், சிரிய தரப்பு பல ஏவுகனைகளை தடுத்து வீழ்த்தியிருக்கின்றது
இதனால் அடுத்தகட்ட விமான தாக்குதல் நடத்துவதில் தாமதம் இருக்கலாம்
எனினும் நள்ளிரவில் நடந்த குண்டுவீச்சில் 3 சிரியர்கள் கொல்லபட்டிருக்கின்றார்கல்
ரஷ்யாவும் ஈரானும் இதனை வன்மையாக கண்டிக்கின்றன, விளைவுகள் கடுமையானவை என எச்சரிக்கின்றன
துருக்கி ஜெர்மனி எல்லாம் அமெரிக்க கூட்டணிக்கு ஜால்ரா அடிக்க தொடங்கி இருக்கின்றது
இதில் சீனா ஏதும் சொல்லி தொலைத்து வடகொரியா ஆட்டம் போட்டால் நிலமை சிக்கலாகும் என உணர்ந்த அமெரிக்க தரப்பு இப்பொழுது சீனாவிடம் வரிகுறைப்பு பற்றி பேசதொடங்கியாயிற்று
தன் வர்த்தகம் முக்கியம் என சீனா கருதுவதால் சிரிய சிக்கலில் அதன் சுருதி குறையலாம்
அமெரிக்க தரப்பு இந்த ரசாயாண ஆயுதங்களை ஒழிக்க நடக்கும் தாக்குதலை வரவேற்கின்றது எதிர் நாடுகள் கண்டிக்கின்றன
இரு பிரிவாக வரிந்துகட்டுகின்றார்கள், அவசர கூட்டங்கள் பல நாடுகளில் நடக்கின்றன
இப்பொழுதுதான் சிரியாவின் உள்நாட்டுபோர் முடிந்தது, ஐஎஸ் இயக்கமும் அட்டகாசமில்லை
இனி கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம் என அம்மக்கள் நினைத்த காலத்தில்தான் இந்த வெளிநாட்டு தாக்குதல் தொடங்கிவிட்டது என்பதுதான் சோகம்..
உலக கவனம் எல்லாம் சிரியாவில் இருக்க , பாலஸ்தீனத்தை போட்டு சாத்துகின்றது இஸ்ரேல்
கிட்டதட்ட 100 பாலஸ்தீனியருக்கு மேல் பலியானாலும் கண்டுகொள்ள யாருமில்லை
கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்பத்தையும் தவற விடாமல் பயன்படுத்துவதில் இஸ்ரேலியர் பாணியே தனி
யாரும் பாலஸ்தீனியரை கண்டுகொள்ளா நிலையில் அவர்கள் ஜெருசலேமில் மூன்றாம் ஆலயம் கட்டினாலும் ஆச்சரியமில்லை