கல்விபணி என்ற வகையில் பணக்கொள்ளை

நெல்லை மாவட்டம் சின்னம்மாள்புரம் என்றொரு ஊர் உள்ளது, பிரிவினை கிறிஸ்தவர்கள் அதிகம் கொண்ட ஊர் அது

இதனால் வெளிநாட்டு மிஷனரிகளுக்கு அங்கு வந்து சேவை செய்வது எளிதான விஷயமாயிற்று

அப்படி சில சேவை நிறுவணங்கள் வந்தன, அவற்றில் சில பெரும் பள்ளிகளை தொடங்கி கல்லா கட்ட ஆரம்பித்துவிட்டன, இன்று தென் திருநெல்வேலியின் குறிப்பிடதக்க பள்ளி அவர்களது.

அவர்கள் வளைத்து போட்ட நிலமும், நீச்சல்குளம் எனும் பெயரில் அப்பக்க நிலத்தடி நீரினை உறிஞ்சி எடுத்து விவசாயிகள் வயிற்றில் அடிப்பதை எல்லாம் கேட்க யாருமில்லை

கல்விபணி என்ற வகையில் பணகொள்ளையோடு நீர் கொள்ளையும் அமோகமாக நடக்கின்றது

அப்படி சின்னமாள்புரத்தில் இருந்த பல இல்லங்களில் ஒரு இல்லம் சர்ச்சைகுள்ளானது, வெளிநாட்டு போதகர் சிறுவர்களை தகாத காரியங்களுக்கு பயன்படுத்தினார் எனும் சர்ச்சை 2011ல் வெடித்தது

நேற்று வள்ளியூர் நீதிமன்றம் அந்த போதகருக்கு 5 வருட சிறைதண்டனை விதித்திருக்கின்றது

ஏழை மாணவர்களுக்கான இல்லம் என்றபெயரில் சிறுவர்களை வெளிநாட்டு பாதிரி துஷ்பிரயோகம் செய்தது நிரூபிக்கபட்டிருக்கின்றது

பக்தாஸ் எல்லாம் காவேரி கருப்புகொடி, டெல்லி சம்பவம், மோடிஜிக்கு ஆறுதல் என திசை திரும்பி இருப்பதால் இவ்விஷயத்தை கண்டுகொள்ளவில்லை போல‌

ஒரு பக்தாஸும் இந்த தீர்ப்பை கண்டுகொண்டதாக தெரியவில்லை