நடிகையர் திலகம் திரைப்படம்

 

Image may contain: 1 person, close-up
எதிர்பார்ப்பை எற்படுத்தியிருக்கும் படங்களில் சாவித்திரி கதையினை தழுவி எடுக்கபட்டிருக்கும் நடிகையர் திலகமும் ஒன்று

எந்த நடிகைக்கும் இல்லா வரலாறு அவருக்கு உண்டு. 16 வயதில் நடிக்க வந்து உச்சத்திற்கு சென்று ஜெமினிகணேசனை மணக்கும் வரை அவர் வாழ்வு சிக்கல் இல்லை

எல்லா நடிகர்களும் அவரோடு நடிக்க வரிசையில் நின்றனர், கண்களிலே பேசிய நடிகை சாவித்திரி

திரைப்படம் தயாரிக்க புகுந்து அதில் வஞ்சகர் கூட்டமும் புகுந்து அவரை திசைமாற்றி ஏமாற்றி அவர் சொத்துக்கள் பறிபோக தொடங்கிய பின்புதான் அவர் வீழ்ச்சி தொடங்கிற்று

தைரியம்,பக்தி, நன்றி, கொடை, இளகிய மனம் என பல குணங்கள் அவரின் திரைவாழ்விற்கு அப்பாற்பட்டு பேசபட்டன‌

Image may contain: 1 person, close-upமுக்கியமாக நாட்டுபற்று

1962 சீனப்போரில் தன் கழுத்திலும் தன் மகள் கழுத்திலும் நகைகள் அணிந்து கொண்டு சென்று அன்றைய ஆளுநரிடம் அப்படியே கழற்றி போர் நிதியாக கொடுத்தவர்

கிட்டதட்ட அது அன்றே 200 சவரன் இருக்கும் என்கின்றார்கள், அந்த தேசபற்று எந்த நடிகைக்கும் இல்லை

பின்னாளில் குடிசையில் வாழ்ந்தபோதும் தன் பழைய டிரைவருக்கு உதவ தன் கோப்பைகளை எல்லாம் விற்று கொடுத்தவர்

கோபுரம் கட்டி கொடியேற்றி வாழ்ந்து பின் குப்பைமேட்டில் வீழ்ந்து 46 வயதிலே இறந்துவிட்ட நடிகை அவர்

பல திருப்பங்கள் நிறைந்த அவர் வாழ்வினை திரைப்படமாக எடுத்திருக்கின்றார்கள், டீசர் வந்துவிட்டது.

இந்த நாசமாய் போன திரைப்பட வேலைநிறுத்தம் இல்லை என்றால் விரைவில் எதிர்பார்க்கலாம்

டீசர் பார்த்தால் அதில் இந்த கீர்த்தி சுரேஷ் சாவித்திரி வேடத்தில் நடித்திருக்கின்றாராம்.

சாவித்திரியின் அழகும் தைரியமும் ஊக்கமான உள்ளமும் கொணவர் குஷ்பு அவர்தான் அந்தபடத்திற்கு பொருத்தமான நடிகை

அக்கால ” நடிகையர் திலகம்” கதையினை இக்கால “நடிகையர் திலகத்தை” வைத்துத்தான் எடுத்திருக்க வேண்டும்

கனி இருக்க காயினை கவர்ந்திருக்கின்றார் இயக்குநர் கண்டனங்கள்

எப்படி பெரியார் படத்தில் மணியம்மை வேடத்தில் குஷ்பு ஜொலித்தாரோ, அப்படி இந்த சாவித்திரி படத்திலும் ஜொலித்திருப்பார்

ஆனால் ரசனையும் பொருத்தமும் தெரியாதவர்கள் அந்த கீர்த்தி சுரேஷை நடிக்க வைத்திருக்கின்றார்கள்

சாவித்திரியின் புன்னகை பிரசித்தி பெற்றது, கீர்த்தி சுரேஷின் புன்னகை சின்னகவுண்டர் மனோராமாவின் புன்னகை விட கொஞ்சம் கம்மி என்பதை தவிர ஒன்றும் சொல்ல முடியாது

குஷ்பு நடித்திருந்தால் வரலாற்று புகழ்பெற்றிருக்கும் படம், இப்பொழுது சாதாரண படமாக வந்து செல்ல போகின்றது

இப்போதைக்கு வரட்டும், பின்னொரு நாளில் தலைவியினை வைத்து சாவித்திரி கதையினை சங்கம் பிரமாண்டமாக தயாரிக்கும்

அப்பொழுது இந்த இயக்குனருக்கு தான் செய்த இமாலய தவறு புரியும்