சமூக வலைதளம் என்பது எவ்வளவு சக்திவாய்ந்தது

அந்த ஆசிரியரின் பேச்சு அவரை பொறுத்தவரை ரகசியமாகத்தான் நடந்தது, ஆனால் சிக்கிகொண்டார்

இதுவே பழம் காலமாக இருந்தால் விஷயம் வெளிவந்திருக்காது, மிஞ்சி போனால் உளவுதுறை அதனை பதிவு செய்து யாரையோ மிரட்டி இருக்கும்

இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பதே யாருக்கும் தெரியாமல் போயிருக்கும்

ஆனால் தொழில்நுட்ப உச்ச காலத்தில் சமூக வலைதளங்களால் அது பகிரபட்டு விஷயம் கைது, விசாரணை வரை சென்றிருக்கின்றது

இந்த விஷயம் இவ்வளவு சிக்கலாக முதல் விஷயம் சமூக வலைதளங்கள்

சமூக வலைதளம் என்பது எவ்வளவு சக்திவாய்ந்தது என அரசுகள் உணர்ந்துகொண்டிருக்கின்றன.

எகிப்தில் சமூக வலைதளதால் புரட்சி, டுனிசியாவில் புரட்சி என்றபொழுது நம்ப முடியவில்லை

தமிழக நிலவரத்தினை கண்டால் அது உண்மை என தோன்றுகின்றது

கண்ணுக்கு தெரியா பூதமாக ஆட்சியாளர்களை மிரட்ட தொடங்கியிருக்கின்றது சமூக வலைதளங்கள்,

இதனால் நல்லது நடந்தால் சரி