பொறுத்து பொறுத்து பார்த்த தலைவி பொங்கிவிட்டார்
பொறுத்து பொறுத்து பார்த்த தலைவி பொங்கிவிட்டார்
ஆசிபா விவகாரம், தேவாங்கு பேராசிரியை விவகாரம் என பல பெண்களுக்கு எதிரான விஷயங்களை கண்டித்து பொதுமக்களுடன் மாபெரும் போராட்டத்தை தலைவி நடத்தி இருக்கின்றார்
சங்கம் இதில் கலந்துகொள்ளவில்லை என்றாலும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது
இந்தியாவே திரும்பிபார்த்த இந்த போராட்டத்தை இங்குள்ள சுயநல திருட்டு ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை என்றாலும் உலகமே திரும்பி பார்க்கின்றது
இம்மாதிரி கொடுமை செய்பவர்களை நாடற்றவர்கள் ஆக்கி சாகும்வரை தண்டிக்கவேண்டும் என முழங்கினார் தலைவி
தமிழகத்தில் எந்த மாதர் சங்கமும் போராடவில்லை, தமிழக பிரதான கட்சிகள் எல்லாம் அறிக்கையோடு அமைதி
ஆனால் மிக துணிவாக களத்தில் இறங்கி கர்ஜித்துகொண்டிருக்கின்றார் தலைவி
சிங்க தலைவிக்கு சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.
தமிழகத்து அரசியல் களத்தில் தவிர்க்கமுடியா சக்தியாக வலம் வரும் தலைவி இன்னும் மிக சிறப்பாக மக்களுக்கு பணியாற்றுவார், போராடுவார் என்பதில் சங்கம் பெரும் மகிழ்ச்சி கொள்கின்றது.
தமிழகம் தனக்கான தலைவரை அடையாளம் கண்டு கொண்டிருக்கின்றது.
சிங்க தலைவி வாழ்க….
