பழனிச்சாமி அரசு என்பது செத்துவிட்ட அரசு
பேராசிரியை ஆடியோ தொடர்பாக இன்று மாலை பத்திரிகையாளர்களை சந்திக்கின்றார் ஆளுநர் : செய்தி
தமிழகம் மகா முக்கிய சிக்கலை சந்தித்தபொழுதெல்லாம் அமைதி காத்தவர் புரோகித்
பாரதியார் பல்கலைகழக லஞ்ச வழக்கில் கூட அன்னார் அமைதி, இன்னும் ஏராளமான இடங்களில் மகா அமைதி
காவேரிக்காக தமிழகம் பொங்கும் பொழுதும் அமைதிகாத்தவர், மூச் கூட விடவில்லை. பிரதமருக்கு கருப்புகொடி என்றபொழுது கூட கண்டுகொள்ளவில்லை
ஆனால் பேராசிரியை விஷயத்திற்கு இவர் ஏன் பொங்குகின்றார்?
கொழுந்தை கிள்ளினால் ஆணிவேர் ஏன் ஆடவேண்டும், காட்டுகோழி கத்தினால் சிங்கம் ஏன் அலறவேண்டும்
எங்கோ இருக்கின்றது விஷயம், தானாக முன்வந்து சிக்கலில் விழுகின்றார் ஆளுநர்
விஷயம் சிபிஐ விசாரணைக்கு மாற்றபடும் அளவிற்கு சீரியஸாகின்றது, இந்த ஆளுநர் ராஜினாமா செய்துவிட்டு விசாரணைக்கு வரட்டும்
பன்றிவால் பிடித்த பன்ரிலால் உடனே வெளியேறட்டும்
இந்த அரசுக்கும் முடிவுகட்டமாட்டேன் ஆளுநரையும் திரும்ப பெறமாட்டேன் என மத்திய அரசு அடம்பிடிக்குமானால் அது மாபெரும் துரோகம்
தமிழகத்தில் முதல்வரும் துணைமுதல்வரும் குத்துகல்லாக வீற்றிருக்க ஆளுநர் பத்திரிகையாளரை சந்தித்தால் என்ன அர்த்தம்?
பழனிச்சாமி அரசு என்பது செத்துவிட்ட அரசு என்பதுதான் அர்த்தம்