செயற்கைகோள் மகாபாரத காலத்திலே இருந்ததாம் : திரிபுரா பாஜக முதலமைச்சர்

“மகாபாரத போர் நடைபெற்றபோது, கண் பார்வையற்ற திருதிராஷ்டிரன் போர்க்களத்தின் அருகே இல்லாமல், அரண்மனையில் இருந்தபடியே தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொண்டார். இணையதளம் மற்றும் செயற்கைகோள் தொழில்நுட்பம் மூலமே இது சாத்தியமாயிற்று.

இதன் மூலம் அந்த காலத்திலேயே இத்தகைய தொழில்நுட்பம் இருந்துள்ளது நமக்கு தெரிகிறது”

சொல்லி இருப்பது யார் தெரியுமா? திரிபுராவின் பாஜக முதலமைச்சர்

மகாபாரதம் பாண்டவர் வைப் பாஞ்சாலியால் நடந்த யுத்தம் என்றால் இவரோ வைபை ரேஞ்சுக்கு அள்ளிகட்டுகின்றார்

அதுவும் செயற்கைகோள் மகாபாரத காலத்திலே இருந்ததாம்

அவ்வளவு முன்னேறிய அறிவாளிகள் ஏன் திருதிராட்டினருக்கு கண்பார்வை செய்யவில்லை? ஒருவன் கண்ணுமா கிடைக்கவில்லை?

ஒரு லேசர் சிகிச்சையுமா செய்யவில்லை

இன்னும் குசேலனுக்கு கண்ணன் பிளாங்க் செக் கொடுத்தான், குபேரன் பிட்பாயின் வைத்திருந்தான், பாஞ்சாலி மானத்தை கண்ணன் ஆன்லைனில் காத்தான் ,

தன் குண்டுதுளைக்காத‌ பென்ஸ் காருக்கு பஞ்சர் ஒட்டும்பொழுது அர்ஜூனன் கர்னனை கொன்றான், பீஷ்மருக்கு ஸ்டெம்செல் கிகிச்சை செய்யபட்டிருந்தது என்றெல்லாம்
என்றெல்லாம் அள்ளிவிடுவார்கள்

லெனின் சிலையினை இடித்துவிட்டு என்ன பேசுகின்றார்கள் பார்த்தீர்களா?

பாவம் திரிபுரா மக்கள்