இருவர் படம் தமிழக கடந்தகால அரசியலை அப்படியே சொன்ன படம்

இருவர் படம் தமிழக கடந்தகால அரசியலை அப்படியே சொன்ன படம், இன்னொரு படம் அதுபோல் வாரா

தன் மிக தீவிர‌ ரசிகை தன்னை தேடிவந்துவிட்டு தன்னோடு வாழதுடிக்கும் தருணத்தில் தமிழ்செல்வன் கேட்பார்

“ஏன் எல்லாவற்றையும் தூக்கி போட்டுட்டு வந்துட்டே?”

அந்த செந்தாமரை சொல்வாள் “உங்க 4 வரி கவிதையால”

கலைஞரின் முதல் திருமணமும், பத்மாவதி இறந்த நிலையில் இரண்டாம் திருமணமும் சொந்த பந்தம் நடத்தி வைத்தது, மூன்றாம் திருமணமே அவரின் மனம் தானாய் விரும்பி நடந்தது

அதுவும் தன் தமிழுக்காய் ஒரு பெண் தன் பின்னால் வந்த ஒருவித காதல் அது.

ஒரு அரங்கில் “ராசாத்தி உன்ன எண்ணி ராவெல்லாம் கண்முழிச்சேன், ராவெல்லாம் கண்முழிச்சி ராணி உன்ன கைபிடித்தேன்” என புஷ்பவனம் குப்புசாமி பாடுகையில் கண்களை துடைத்துகொண்டு பழம் நினைவில் மூழ்கினார் கலைஞர்

ஏன் அந்த மனிதனுக்கு காதல் வர கூடாதா? அவர் தமிழில் மயங்கி ஒரு பெண் வரகூடாதா?

அதை எல்லாம் புரிந்துகொள்ள ரசனையும், கலை உள்ளமும், காதல் மனமும் வேண்டும்

மாட்டு மூத்திரம் குடிப்பவர்களுக்கு ஏது ரசனை?

கோவணாடிகளுக்கு ஏது கலை உள்ளம்

அவர்கள் அதனை கள்ள உறவு என்றுதான் சொல்வார்கள்.