மோடிக்கு லண்டனில் இந்தியர் சிலர் எதிர்ப்பு
மோடிக்கு லண்டனில் இந்தியர் சிலர் எதிர்ப்பு , ஆசிபா விவகாரம் உட்பட பல விஷயங்களுக்காக ஆர்ப்பாட்டம்.
ஒஹோ, இதனை எல்லாம் பிரிட்டன் அரசு அனுமதிக்கின்றதா சரி.
அந்த தெரசா மே இங்கு வரட்டும், சிரியர்களை கொல்லாதே என நாமும் கொடிபிடித்து விடலாம்
அமெரிகாவோடு சேர்ந்து ஆபக்ன, ஈராக், சிரியா என பிரிட்டன் செய்யாத அட்டகாசமில்லை
சிரியாவில் கொல்லபட்ட குழந்தைகளில் ரத்தத்தில் பிரிட்டனுக்கும் பங்கு உண்டு
அதை எல்லாம் சொல்லாதவர்கள்தான், பிரிட்டனில் இருந்துகொண்டு மோடியினை எதிர்க்கின்றார்களாம்
நல்லவர்கள் பிரிட்டனால் கொல்லபட்ட சிரிய குழந்தைகளுக்காக கண்டிக்கட்டும் பார்க்கலாம் , செய்யமாட்டார்கள் காரணம் பாஸ்போர்ட்டை கிழித்து போட்டு அனுப்பும் பிரிட்டன்.
குழந்தைக்காக சாடுவதாக இருந்தால் ஆப்கன் முதல் சிரியாவரை பிரிட்டனால் கொல்லபட்ட குழந்தைகளுக்காக சாடிவிட்டு மோடியினை சாடுங்கள்
பிரிட்டனை விட்டுவிடுமோ காரணம் அதை நக்கி பிழைக்கின்றோம், இந்தியாவினை விடமாட்டோம் என்பதெல்லாம் உங்களுக்கு அவமானமாக தெரியவில்லையா?
தில்லையாடி வள்ளியம்மை முதல் திப்பு சுல்தான், மருதுபாண்டியர் வம்சத்து பச்சிளம் குழந்தைகள்வரை கொன்ற பிரிட்டனில் இருந்துதான், இன்னும் ஏராளமான படுகொலைகளை இந்தியாவில் செய்த பிரிட்டனில் இருந்துதான் கத்துகின்றீர்கள்
இன்றுவரை பிரிட்டிஷ் அரசோ, அரச குடும்பமோ அதற்கு மன்னிப்பு கோரியிருக்கும்? நிச்சயம் இல்லை
ஆனால் மானம் கெட்டு கொஞ்சமும் அறிவின்றி அங்கிருந்துகொண்டு இந்திய பிரதமரை எதிர்க்கின்றீர்கள்
உங்களுக்கு வேண்டியது பிரிட்டன் குடியுரிமை என்றால் இப்படித்தான் விசுவாசம் காட்டி , இந்திய எதிர்ப்பு செய்வீர்களா?
மானிட ஜென்மமா நீங்கள்?
இனி பிரிட்டன் பிரதமர் இங்கு வரட்டும், இந்தியர்கள் செய்ய வேண்டியதை செய்யலாம்
சிரிய குழந்தைகளை கொல்லும் பிரிட்டனின் தெரசா மே திரும்பி போ, அக்குழந்தைகளுக்கு நீதி வேண்டும் என நாமும் கத்துவோம்