ஆனாலும் எச்.ராசா அலம்பல் அதிகம்
மதுரை முத்து, வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம் இன்னும் ஏராளமானோரை வளர்த்து விட்டுவிட்டு இப்பொழுது எச்.ராசாவினை கண்டிக்க கிளம்ப என்ன இருக்கின்றது?
அவர்கள் பேச்சாத பேச்சுக்களா? ஆபாசங்களா?
நிறைய உரக்க முழங்கி பேசும்பொழுது சில எதிரொலிகள் கேட்காமல் போகாது, இப்பொழுது கேட்கின்றது.
காலசக்கரம் சுழல்கின்றது.
அதுவரை நாகரீகமான தமிழகத்தில் “ராஜாஜி காந்தி மகனை மகளைகாட்டி மயக்கினார் “என்றும்,
“நேருவும் பண்டாராநாயகவும் தனிமையில் என்ன பேசினார்கள்?” என்ற தரங்கெட்ட வார்த்தைகள் எல்லாம் அங்கிருந்தே வந்தன
நாகரீகமான தமிழ் சமூகத்து வீழ்ச்சி அன்றுதான் தொடங்கிற்று
அது காம்ராஜர், இந்திரா, ராமசந்திரன், ஜெயா, ராஜிவ் என பலரை விமர்சிக்கின்றோம் பல இடங்களில் அச்சில் ஏற்றமுடியா வார்த்தைகளாக மேடைகளில் வந்தது, மறுக்க முடியாது
பின் கலைஞரை விமர்சிக்க நடராஜன் கோஷ்டி அதே பாணியில் இறங்கியது, அவர்கள் பேசியதெல்லாம் மிக மிக அசிங்கமான பேச்சுக்கள்
இப்பொழுது அதே பாதைக்கு எச்.ராசா வருகின்றார். ஆனால் அன்று இணையம் முகநூல் வாட்ஸப் எல்லாம் இல்லாததால் வெற்றிகொண்டான் எல்லாம் தப்பித்தார்
எச்.ராசா மாட்டிகொள்கின்றார்
சாட்சாத் தொடங்கி வைத்தது அவர்கள்தான், ஆனால் எச்.ராசாவின் எதிர் குரலோடு அது அடங்கட்டும்.
ஆனாலும் எச்.ராசா அலம்பல் அதிகம்
தேசபிரிவினை கலவரம், காந்தி கொலை, பாபர் மசூதி இடிப்பு கலவரம் என பல்லாயிரம் பேரை கொன்ற கூட்டத்தில் இருந்துகொண்டு உதயகுமார், சாதிக் பாட்சா, தா.கிருட்டினன், தினகரன் பத்திரிகை சம்பவம் என்றால் எப்படி?
போகிற போக்கில் அதிக கொலை செய்தது நீங்களா நாங்களா என்ற கேள்விக்கு வந்து நிற்கின்றார் எச்.ராசா
சந்தேகமே இல்லை அதிக பொதுமக்கள் கொலை முதல் இப்பொழுது நீதிபதி லோகா மர்ம மரணம் வரை முண்ணணியில் இருப்பது எச்.ராசா தரப்புத்தான்