அசிங்கபடுத்துகின்றார் சேகர்
என்ன இருந்தாலும் பத்திரிகையாளர்களை பொதுபடையாக எஸ்.வீ சேகர் சொல்லியிருப்பது கண்டனத்திற்குரியது
ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் தமிழகத்தின் பத்திரிகை உலகம், புத்தக உலகமெல்லாம் இன்றும் பெரும்பான்மை பிராமணர்களாலே நடத்தபடுகின்றன
அன்றே சோ ராமசாமி துணிந்து எழுத இவைதான் காரணம்.
தமிழக டிவி மீடியாவில் மட்டும் பிராமணர்களுக்கு சொந்த சேணல் இல்லை என்றாலும் பெரும்பான்மை டிவியின் நிர்வாகிகளாக அவர்களே உள்ளனர், அவர்களை மீறி அந்த சேனலை நடத்தும் தைரியம் டிவி முதலாளிகளுக்கே இல்லை
இன்றும் மீடியா கட்டுப்பாடு என்பதும், இன்னும் பல விஷயங்களும் பிராமணர் கைவிட்டு செல்லவில்லை
எதனையோ எஸ்வீ சேகர் சொல்லபோய் தன் சொந்த சாதியினையே அசிங்கபடுத்திகொண்டிருக்கின்றார்
பதற்றத்தில் உள்வீட்டிலே மலம் வீசுகின்றார் சேகர்
அவர் மீது வரும் இப்பொழுது வரும் சர்ச்சைகளுக்கு மன்ன்னிப்பு கேட்டுவிடுவது நல்லது
இல்லையேல் சொந்த சாதியிலே அவருக்கு கடும் எதிர்ப்பு வரும், காரணம் மீடியா உலகில் அவர்களின் ஆதிக்கம் அப்படி இருக்கின்றது
முதலாளி, நிர்வாகி மட்டுமல்ல சிறப்பு விருந்தினர், நடுவர் முதல் ஆங்கர் வரை அவர்கள் ஆதிக்கம் அதிகம்
அவர்களைத்தான் அசிங்கபடுத்துகின்றார் சேகர்