சர்ச்சையாக பேசாதீர்கள் : கட்சிகாரர்களுக்கு மோடி கண்டிப்பு

சர்ச்சையாக பேசாதீர்கள், அது பாஜகவின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்” : கட்சிகாரர்களுக்கு மோடி கண்டிப்பு

என்னது நற்பெயரா?

கட்சியின அடையாளமே உடைத்தல், கொல்லுதல், காயபடுத்துதல், கலவரத்தை தூண்டுதல், பயமுறுத்தல், அவ்வப்போது திடீர் காமெடிகள் தானே

இதில் என்றைக்கு கட்சிக்கு நற்பெயர் இருந்தது?

கட்சியின் ஒரே அடையாளம் கண்டபடி பேசுவதுதான், அவர்கள் திருந்திவிட்டால் காந்தி தொண்டர்களுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

பின் காவியினை எறிந்துவிட்டு காந்தி குல்லா மாட்டிகொண்டு அஹிம்சாவாதிகளாக மாற வேண்டியதுதான்

சர்ச்சை பேச்சை நிறுத்திவிட்டால் ஏது பாஜக?

சர்க்கஸ்காரர் இயல்பே பல்டி அடித்து ஏதாவது செய்து மக்கள் கவனத்தை ஈர்ப்பதுதான்

அதனை செய்யகூடாது என்றால் எப்படி கூட்டம் வரும்?

இந்த விஷபரிட்சை வேண்டாம் மோடி

திருந்திவிட்ட தமிழிசையும், எச்.ராசாவினையும் எங்களால் நினைத்துகூட பார்க்க முடியவில்லை., அப்படி நினைத்து பார்த்தாலே அழுகையாக வருகின்றது.


அடுத்த 50 ஆண்டுகளுக்கு பாஜகவே வெற்றி பெற வேண்டும்: தொண்டர்களுக்கு அமித் ஷா வலியுறுத்தல்

அடுத்த 50 ஆண்டுகளுக்கு பின் பாஜகவே வெற்றிபெற வேண்டும் என சொல்லியிருந்தால் சரியாக இருந்திருக்கும்.


 எஸ் வீ சேகரை வலை வீசி தேடி பிடித்து அடைக்க போகின்றார்களாம்

ஆனால் அங்கிள் சைமனுக்கு டாட்டா காட்டிவிட்டு வந்துவிட்டார்களாம்

என்ன சட்டமோ, என்ன மாதிரி கைது தேடலோ?

அடைத்தால் இருவரையும் அல்லவா அடைக்க வேண்டும்

எஸ்.வீ சேகருக்கு ஒரு நீதி, அங்கிள் சைமனுக்கு இன்னொரு நீதியா?