கம்யூனிஸ்ட் உருப்படாமல் போனது அப்படித்தான்

இந்த கம்யூனிஸ்டுகளுக்கு என்னாயிற்று என தெரியவில்லை, திடீர் என தலித்பாசம் பொத்துவிட்டது

திமுகவில் தலித்துக்கள் மாவட்ட செயலாளராக ஆகமுடியுமா என பொங்குகின்றார்கள்

அட பதர்களா, அதன் தலைவனே மிக தாழ்த்தபட்ட சாதியிலிருந்து வந்தவன் என்பதை மறந்துவிட்டீர்களா?

ஆ.ராசா போன்ற தமிழக‌ தலித்துகள் எல்லாம் டெல்லியில் அமைச்சரானது திமுகவின் சாதனை என்பது தெரியாதா?

திமுகவில் சாதிபாகுபாடுகள் என்றும் இருந்ததில்லை, பகுத்தறிவு கொண்ட பிராமணரை கூட அது தள்ளிவைக்கவில்லை

இதெல்லாம் குதர்க்கம் ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவை

இவ்வளவு பேசும் இந்த கம்யூனிஸ்டுகள் எத்தனை தலித்துக்களை தலைவர் ஆக்கினார்கள் என்றால் சொல்ல தெரியாது, காரணம் ஒரு தலித்தும் அங்கு உயர்மட்டத்திற்கு வந்ததில்லை

இத்தேசத்தில் கம்யூனிஸ்டுகள் சாதி, மதம் கடந்து இயக்கம் நடத்தியிருந்தால் இத்தனை உதிரி கட்சிகள் வந்திருக்காது

திமுகவினை சாடும் தமிழக கம்யூனிஸ்டுகளுக்கு ஒரே ஒரு கேள்வி

1950களில் கேரளத்தில் கம்யூனிசம் வளர்ந்தபொழுது , பாட்டாளிகளும் கூலிகளும் நிரம்பிய தமிழகத்தில் கம்யூனிசம் வளராமல் திமுக எப்படி வளர்ந்தது?

அடிதட்டு மக்களின் நம்பிக்கையினை திமுக எப்படி பெற்றது?

வரலாற்றை புரட்டுங்கள், கம்யூனிஸ்டுகளின் பல புரட்டுகள், உயர்சாதி தலைவர்கள் அடிதட்டு மக்களை ஒருமாதிரி நடத்திய பல விவகாரங்கள் வெளிவரும்

கம்யூனிஸ்ட் உருப்படாமல் போனது அப்படித்தான்