பத்திரிகை விவாதங்கள்

ஊழல் பற்றி பேச திமுகவிற்கு அருகதை இல்லை :ஜெயக்குமார் கோபம்

ஆமாம், ஊழல் குற்றவாளி என தீர்பிடபட்ட ஜெயாவின் படத்தை வணங்கும் அவர்களுக்குத்தான் ஊழல்பற்றி பேச‌ முழு அருகதை இருக்கின்றது

திமுகவிற்கு எங்கே இருக்கின்றது

அவர் கோபத்திலும் நியாயம் இருக்கின்றது, நீங்கள் இன்னும் அதிகமாக கோபபடுங்கள் ஜெயகுமார்

இதை திருப்பி சொல்ல முக ஸ்டாலின் திணறிவிடுவார், “குடல் வத்தி கடல் செத்து” என குழம்பிவிடுவார் என்பதுதானே உங்கள் கெட்ட எண்ணம் ஜெயக்குமார்?

இதற்கு ஸ்டாலின் அல்ல, மூன்றாம் கலைஞர் கூட பதில் சொல்லமாட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும், சொன்னால் மாட்டி கொள்வார்கள்

ஸ்டாலினை அப்படி “குடல் வத்தி கடல் செத்து” சொல்ல வைத்து, அதை கேட்டு நீங்கள் வயிறு குலுங்க சிரிக்கும் வாய்ப்பினை அவர்கள் கொடுக்கமாட்டார்கள்

எங்கே? தைரியம் இருந்தால் கனிமொழிக்கு இந்த சவாலை விடுங்கள் பார்க்கலாம்.


பத்திரிகைகளில் “இன்றைய குழந்தை கற்பழிப்புகள்” என பக்கம் போடும் அளவிற்கு வந்தாயிற்று நிலை

உபியில் 10 வயது சிறுமி பிணமாக மீட்பாம், இதுவே இத்தேசத்தில் கடைசியாக இருக்கட்டும் என மனம் வெம்புகின்றது


கன்னடத்தில் ஆட்சியினை பிடிப்பது யார்? தொங்கு சட்டசபையா? : தமிழ் பத்திரிகைகள் விவாதம்

அங்கு இருவரில் யார் ஆட்சி பிடித்தாலும் இங்கு காவேரி வரபோவதில்லை.

ஜனாதிபதி ஆட்சி வந்தால் ஓரளவு சாத்தியம் என்பதால் அதுவே வரட்டும்