குஜராத்தில் 5000 விவசாயிகள் சாகும் உத்தரவு வழங்க போராட்டம்
குஜராத்தில் 5000 விவசாயிகள் சாகும் உத்தரவு வழங்க போராட்டம் : செய்தி
இந்த செய்தி தமிழக மீடியாக்களில் வரவில்லை, காரணம் இப்பொழுது பினாமி ஆட்சி, பிற்காலத்தில் நேரடி ஆட்சி(!) அது இல்லாவிட்டால் இதே பினாமி ஆட்சி என முடிவில் இருக்கும் பாஜகவின் கரங்களுக்கு மீடியாக்களும் கட்டுபடுகின்றன
நிம்மி ஆண்டி விஷயத்திலே அது தெரிகின்றது
குஜராத்தில் இந்த விவசாயிகளுக்கு என்ன சிக்கல் என்றால் , நீர் பிரச்சினை கடன் பிரச்சினை அல்ல மாறாக நிலமே பிரச்சினை
அவர்களின் நிலங்களை வளர்ச்சி, தொழில்பேட்டை என கையகபடுத்திய அரசு பதிலுக்கு நிலமும் கொடுக்கவில்லை, பணமும் கொடுக்கவில்லை
அந்த கருப்புபணம் மீட்டு வந்த 15 லட்சமும் வரவில்லை
பின் அந்த ஏழை விவசாயிகள் என்ன செய்வார்கள், போராடி பார்த்தார்கள். 125 கோடி மக்களுக்காக உழைக்கும் மோடியின் மத்திய அரசும், பாஜகவின் குஜராத் அரசும் கண்டுகொள்ளவில்லை
எங்களை வாழவிடவில்லை, சாகவாவது விடுங்கள் என வந்து நிற்கின்றார்கள் அந்த அபலைகள்
“குஜராத்தில் மாடல்” என்பது என்ன என்றால் இதுதான்
ஏழைகள் எல்லாம் சாவுங்கள், பணக்காரர் எல்லாம் இன்னும் தொழில் செய்து வாழுங்கள் எனும் அரிய தத்துவமே “குஜராத் மாடல்”
இந்த மாடல் இந்தியாவின் சில இடங்களில் பரப்பபட்டு தோல்வி அடைகின்றது
அது தமிழகத்திலும் வரவேண்டும் என்றுதான் பலர் ஆசைபடுகின்றார்கள்