இங்கு யாரெல்லாமோ வந்தார்கள், ஆண்டார்கள்.

இங்கு யாரெல்லாமோ வந்தார்கள், ஆண்டார்கள்.

அவர்களில் தெலுங்கர்கள் சில நல்ல உணவுகளை கொடுத்தார்கள் நிலைத்தார்கள். சாம்பாரை விடுங்கள் சில உணவுகள் மகா சுவையானவை

இஸ்லாமியர் அட்டகாசமான பிரியாணி, கபாப் என கொண்டுவந்தார்கள் நிலைத்தார்கள்

இந்த வெள்ளைக்கார பயலும் வந்தான், பிரட்டும் இன்னும் சில உப்பு சப்பில்லா பண்டங்களை கொண்டுவந்தான். அதை கண்டாலே எரிச்சலாக வருகின்றது

அவனின் ஒரு சாப்பாடும் உருப்படி இல்லை

ஒரு மனிதன் சாப்பிட கூடிய உணவுகளா அது? அறுசுவையில் ஒரு சுவை கூட இல்லாமல் புதுசுவையும் இல்லாமல் உவ்வே ரகம்

பின் எப்படி அவன் இந்நாட்டில் நிலைக்க முடியும்?

நல்ல சாப்பாட்டை அவன் கொண்டுவந்திருந்தால் இங்கு நிலைத்திருக்கலாம், அப்படி இல்லாமல்தான் இங்கு மட்டுமல்ல உலகெல்லாம் சனியன்களை விரட்டியிருக்கின்றார்கள்

மற்ற விஷயங்களில் அவன் எப்படியோ, இந்த உணவு விஷயத்தில் படு சோம்பேறி. மசாலா சேர்த்து சமைக்க சோம்பல் பட்ட இனம் அது

இங்கு மாபெரும் போராட்டம் நடந்து அவன் விரட்டிவிட பட்டதிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை.

அவன் கொண்டுவந்த இந்த சாப்பாட்டினை வெறுத்தே இத்தேசத்தில் உண்ணாவிரதம் தொடங்கி இருக்கலாம்

அப்படி உண்ணாமல் இருந்தே அவனை இத்தேசம் ஓட விரட்டி இருக்கின்றது

அதுவும் அவன் கொண்டுவந்த காரட், கோஸ் எல்லாம் கண்டால் எந்த மற தமிழனுக்கு பொறுக்கும்?

வெள்ளையன் இங்கு நிலைக்க முடியாமல் போனதற்கு காரணமே இந்த பிரட்டும், பிஸ்கட்டும் இன்னபிற கொடுமையான சாப்பாடுமே என்பது ஆராய்ச்சி முடிவு.