பூச்சிகொல்லி மருந்து எப்பொழுது வந்தது?
முன்பெல்லாம் பூச்சிகொல்லி மருந்துகள் இந்தியாவில் இல்லை, வேப்பிலை கரைசல் இன்னபிற இயற்கை பொருட்கள் என்றே விவசாயம் இருந்தது
பூச்சி அரித்த காய்கறிகள் இருந்தாலும் அவற்றை பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை அவர்கள் எல்லாம் 100 ஆண்டுகள் வாழ்ந்தார்கள்
பூச்சிகொல்லி மருந்து எப்பொழுது வந்தது?
உல்கப்போர் காலங்களில் விஷ ஆயுதங்களை எப்படி தயாரிக்கலாம் என்ற திட்டம் உருவானது , ஹிட்லர் யூதர்களை கொல்ல விஷ வாய்வு விஷ திரவம் எல்லாம் பயன்படுத்தினான்
மனிதர்களை கொல்ல ஆரம்பித்த அந்த விஷ விஷயமே பின் பூச்சி பக்கம் திரும்பியது
அதன் வீரியத்தை குறைத்து விவசாய வயல்களில் தூவ தொடங்கினார்கள், பூச்சிகள் செத்தன என கொண்டாடினார்கள் ஆனால் உணவு விஷயானதை கண்டுகொள்ள மறந்தார்கள்
பயிர் உயிருள்ளது இலையில் படும் விஷத்தையும் அது காய் கனிகளில் தாக்கமாக கொடுக்கும்,அதன் இயல்பு அது
கொடூர நோய்கள் உருவாகும் காரணத்தை அறிந்தபொழுது இந்த பூச்சிகொல்லி மருந்துகள் முண்ணணியில் இருந்தன
இனம்புரியா நோய்கள் எல்லாம் வர வர ஆராய்ச்சியும் பெருகியது, மனித உடல் மகா நுட்பமானது அல்லவா? சிறு துளிவிஷமும் அதில் பாதிப்பை ஏற்படுத்துவது கண்டறியபட்டு, இந்த பூச்சி கொல்லி மூலம் பெரும் நோய்கள் ஏற்படுவது கண்டறியபட்டது
இதை தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை நெடுநாளாக இருந்தது, பூச்சிகொல்லி கம்பெனிகள் அதை தடுத்துகொண்டே இருந்தன
இன்று ஐரோப்பிய யூனியன் பூச்சிகொல்லி மருந்துகளை பயன்படுத்த தடை என சொல்லியாயிற்று
ஐரோப்பா முழுக்க மகிழ்ச்சி கரைபுரண்டோடுகின்றது, பூச்சிகொல்லி போலவே ரசாயாண உரங்கள் இன்னபிற விஷயம் எல்லாம் தலைமுழுக படுகின்றது
அவர்கள் இயற்கை விவசாயத்திற்கு திரும்பிகொண்டிருக்கின்றார்கள்
ஐரோப்பிய யூனியன் பூச்சிகொல்லிகளை நிறுத்தியிருக்கும் இந்நேரம் இந்தியாவிலும் தடை என்ற உத்தரவு வந்திருக்க வேண்டும்
நிச்சயம் நம்மாழ்வார் போன்றவர்கள் இருந்தால் இக்கோரிக்கையினைத்தான் வைப்பார்கள்
ஐரோப்பியரே இது ஆபத்து என நிறுத்திவிட்ட பின் நாமும் அதனை நிறுத்துவது சால சிறந்தது
இங்கே பூச்சிகொல்லி பயிர்களின் பூச்சிகளை கொல்கின்றதோ இல்லையோ விவசாய வீழ்ச்சியில் விவசாயியே அதைகுடித்து செத்துகொண்டிருக்கின்றான்
உலகம் விழிக்கும் பொழுது நாமும் விழிக்க வேண்டும், இந்த பூச்சிகொல்லிகள் உடனே தடை செய்யபடட்டும்
அதே நேரம் பூச்சி கொல்லிகளாக பாரம்பரியமாக பயன்பட்ட விஷயங்கள் புத்துயிர் பெறட்டும்
ஸ்டெர்லைட் போன்ற அழிவு தொழிற்சாலைகளை கொஞ்சமும் மனசாட்சியின்றி அனுமதிக்கும் அரசுகள், இதனை செய்யுமா என தெரியவில்லை
ஆனால் செய்தே தீரவேண்டும், வருங்கால சந்ததி நோயின்றி வாழும்