பிரிந்த கொரியா சேருமா?

Image may contain: one or more people and people standing

இரண்டாம் உலகப்போர் முடியும்பொழுது பல விசித்திரங்கள் நிகழ்ந்தன, வல்லரசுகள் எப்படி எல்லாமோ கோடு கிழித்தன‌

ஜெர்மனை இரண்டாக பிளந்தார்கள், அதிலாவது ஒரு நியாயம் இருந்தது.

ஹிட்லர் கையிலிருந்த நாடுகளை மீட்கும்பொழுது ஜெர்மன் மட்டும் ஐரோப்பாவில் பிரிந்தது, பிரான்ஸ் அப்படியே திருப்பிகொடுக்கபட்டது

இத்தாலிக்கும் சேதமில்லை

கிழக்கில் ஜப்பான் மட்டும் அட்டகாசம் செய்தது, உண்மையில் அதைத்தான் பிடித்து இரண்டாக பிளந்திருக்க வேண்டும் ஆனால் அணுகுண்டு அடியோடு விட்டுவிட்டார்கள்

ஜப்பானின் பிடியிலிருந்த நாட்டை மீட்கின்றோம் என கொரியாவினை பிடித்து இரண்டாக்கினார்கள்

கொரியர்களுக்கும் ஜப்பானியகருக்கும் தினகரனுக்கும் திவாரனுக்குனான திடீர் பகை அல்ல. பெரியார் கோஷ்டிகளுக்கும் ஆழ்வார் கோஷ்டிகளுக்குமான பெரும் வரலாற்று சண்டை

அதன் தொடர்ச்சியாகவே ஜப்பான் கொரியாவினை பிடித்தது, கொரியா மட்டுமல்ல பர்மா வரை ஜப்பான் இரண்டாம் உலகப்போரில் பிடித்தது

பர்மா, தாய்லாந்து, மலேசியா, கம்போடியா , பிலிப்பைன்ஸ் என எல்லா நாடும் அப்படியே கொடுக்கபட கொரியா மட்டும் பிளக்கபட்டது

வியட்நாம் இச்சதியினை ஹோசிமின்னின் ஒப்பற்ற போராட்டத்தால் முறியடித்து ஒரே வியட்நாம் ஆனது

கொரியா அப்படி இணையாமல் வல்லரசுகள் ஆடின. உண்மையில் கொரியாவின் ஜாதகத்தை மாற்றியது ஜப்பானே. ஆனால் அதுவோ இன்று ஒன்றும் தெரியா கன்னி போல் அழுதுகொண்டிருக்கின்றது

ஜப்பான் செய்த தவறுகளுக்கு அது பிளக்கபட்டால் நியாயம், ஆனால் அதை விடுத்து கொரியாவினை இரண்டாக்கி சண்டையிட்டன வல்லரசுகள்

வரலாற்றின் பெரும் அநீதி இது

ஜப்பானையும் ரஷ்யாவினையும் கண்காணிக்கவே தென் கொரியாவில் அமெரிக்கா தலையிட்டு இன்றுவரை நிற்கின்றது

அதனால் 50 வருடமாக மூன்று தலைமுறையாக பெரும் குழப்பமும் சண்டையும் பதற்றமும் நிறைந்த இடமாக வடகொரிய எல்லை மாறியது

அமெரிக்காவினை விரட்டுவோம் என வடகொரியா அணுகுண்டு செய்து, சொந்த பங்காளி தென்கொரியா முதல் ஜப்பான் அமெரிக்கா வரை மிரட்டியது

இப்பொழுடு காட்சிகள் மாறுகின்றன‌

இரு கொரியாக்களும் உறவுக்கு இறங்கி வந்திருக்கின்றன, ஜப்பானால் அடிக்கபட்டு பின் வல்லரசுகளாலும் பிரிக்கபட்ட அந்த கொரியா மறுபடி இணையும் காலம் வரலாம்

பிரிக்கபட்ட பல நாடுகள் எப்படி இணைந்தன என்றால் அந்த பெயரை அப்படியே வைத்த நாடுகள் பின் இணைந்தன‌

மேற்கு ஜெர்மன் கிழக்கு ஜெர்மன். வட வியட்நாம் தென் வியட்நாம் , வடகொரியா தென் கொரியா அந்த வகை

இந்தியா பாகிஸ்தான் என பிரியாமல் மேற்கு இந்தியா கிழக்கு இந்தியா என் பிரிந்திருந்தால் இத்தேசம் பின்னொரு நாளில் வேகமாக இணைந்திருக்கலாம்,

சில நாடுகள் இந்த கொள்கையினை வைத்திருக்கின்றன, தைவானை சீனாவின் ஒரு பகுதி என சீனா சொல்வதும், அருணாசல் பிரதேசம் தெற்கு திபெத் என சொல்வதெல்லாம் விஷயம் இல்லாமல் இல்லை

இந்த தேசத்தை பிரிக்கும்பொழுதே விஷமமாகத்தான் பிரித்திருக்கின்றார்கள் , சேரவே கூடாது என்ற தீர்வு இருந்திருகின்றது

மேற்கு இந்தியா நமது கிழக்கு இந்தியாவோடு சேர்ந்து ஒரே இந்தியா ஆகட்டும்.