“இந்தியர்களுக்கு ஆள தெரியாது, அவர்களை பற்றி பேசாதே” என்றான் ஹிட்லர்

தன்னிடம் இந்திய விடுதலை பற்றி பேசிய சென்பகராமனிடம் “இந்தியர்களுக்கு ஆள தெரியாது, அவர்களை பற்றி பேசாதே” என்றான் ஹிட்லர்

பின் நேதாஜியிடம் “போரில் வென்றால் இந்திய அதிபராக இரும்புகரம் கொண்டு அந்நாட்டை நடத்து, ஜனநாயகம் என்பது இந்தியருக்கு புரியாது” என்றான் அதே ஹிட்லர்

“இன்று சுதந்திரம் கேட்கும் இந்திய தலைவர்களில் பெரும்பாலானோர் சுயநலவாதிகள், அம்மக்களுக்கும் ஜனநாயக மகத்துவம் தெரியாது அதனால் இந்தியா சீரழியும்” என்றார் சர்ச்சில்

“இந்தியர்கள் உணர்ச்சிபூர்வமாக சிந்திப்பார்களே ஒழிய அறிவுபூர்வமாக சிந்திப்பதே இல்லை” என்றான் இன்னொரு பிரிட்டிஷ் ராஜதந்திரி

இலங்கை முன்னாள் தளபதி பொன்சேகா நெற்றியிலடித்தார் போல் சொன்னான் ” தமிழக அரசியல்வாதிகள் பெரும் கோமாளிகள், டெல்லி ஒருநாளும் இந்த கோமாளிகளுக்கு செவி சாய்காது”

இந்தியாவினை இந்தியர் தவிர எல்லா நாட்டுக்காரனும் மிக சரியாக கணித்திருக்கின்றான் என்பதுதான் ஆச்சரியம்

இந்தியாவிலும், தமிழகத்திலும் நடக்கும் காட்சிகள் அவர்கள் சொன்னதை திரும்ப திரும்ப காதில் கேட்க வைக்கின்றன‌

அதிலும் பொன்சேகா சொன்னது மிக்க சரி.