கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் காவேரி இல்லை

கன்னட தேர்தலில் ராகுல் தலமையில் காங்கிரஸ் கோஷ்டி கடும் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றது

பாஜக தரப்பு மோடி, அமித்ஷா, யோகி என களமிறங்குகின்றது. யோகிக்கும் கன்னடத்திற்கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை. உபி அரசினை போட்டுவிட்டு அந்த சாமியாரும் வந்திருக்கின்றார்

 

இப்படி இருதேசிய கட்சிகளும் வரிந்து கட்டி கன்னடத்தில் பிரச்சாரத்தில் நிற்கும்பொழுது ஒரு விஷயத்தை அப்படியே இருவரும் மறைக்கின்றார்கள்

அது காவேரி விவகாரம்.

தொட்டால் அவ்வளவுதான் என்பதால் இருவருமே அதை மறைத்து வேறு என்னமோ அணல் பிரச்சாரம் செய்கின்றனர்

நல்ல பத்திரிகையாளர்கள் என்றால் மெதுவாக தேர்தலில் வென்றுவிட்டால் காவேரி சிக்கலை எப்படி தீர்ப்பர்கள் என இருவரிடமும் கேட்கலாம்,

கேட்டு சிக்கலில் மாட்டி விடலாம்

ஆனால் கவுரி கொலை முதல் பல பத்திரிகையாளர் கொலைகள் அப்படி கேட்க தடுக்கின்றன போல..