செம்மொழி விருது தமிழுக்கு இல்லை

மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சகம் ஜனாதிபதி விருதுகளை அறிவித்திருக்கின்றது, இதில் செம்மொழி தகுதி பெற்ற தமிழர்களுக்கும் விருது முறைப்படி உண்டு

இதி செம்மொழி என சொல்லபட்டுள்ள சமஸ்கிருதம், பாலி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் என சில மொழி விற்பனருக்கு விருது அறிவிக்கபட்டாயிற்று

ஆனால் தமிழில் யார் பெறுவார் என அறிவிப்பே இல்லை, சுருக்கமாக சொன்னால் தமிழில் விருது இல்லை

சும்மாவே அதிகாலை சேவலுக்கு முன்பாகவே எழுந்து இன்று எதிலாவது மத்திய அரசு சிக்காதா என வாசலில் காத்த்திருப்பவர்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் விடுவார்களா?

மத்திய அரசின் தமிழ் வெறுப்பு தொடர்கின்றது என பெரும் சத்தம் ஆரம்பித்தாயிற்று

தமிழில் விருதுபெறும் தகுதியானவர் உண்டா என்றால் உண்டு, ஆனால் அதை உருப்படியாக அரசியல் கலப்பின்றி கொடுக்க முடியுமா என்றால் முடியாது

விருது அறிவிப்பு என சொன்னால் தமிழறிஞர் பழனிச்சாமி என்றொருவர் இருக்கின்றார், புத்தகம் எல்லாம் எழுதியிருகின்றார் என மாநில அரசு சொல்லும்

அது யாரென விசாரிக்க மத்திய அரசு குழு முதல்வரிடம் கேட்டால் “ஹிஹீஹ அது நானே” என்பார் பழனிச்சாமி, மத்திய குழுவிற்கு எப்படி இருக்கும்?

மாநில அரசு பழனிச்சாமி, கோகுல இந்திராவே முத்தமிழ் அறிஞர் என சொல்லும்

இன்னொரு தரப்பு இரண்டாம் கலைஞர் ஸ்டாலின் பொருத்தமானவர் என சொல்லும், அதிலும் ஒரு தரப்பு மூன்றாம் கலைஞரே செமொழி ஆசான் என உரண்டு புரண்டு கத்தும்

கனிமொழி முறைக்கலாம்

இதில் மனுஷ் வேறு கவிதை எழுதி அழிச்சாட்டியம் செய்வார் , கஸ்தூரி வேறு கவிதை களத்திற்கு வந்துவிட்டது

திராவிட செல்வன் தினகரனுக்கு செம்மொழி விருது இல்லையா என ஒருகுரல் கேட்டால், முக ஸ்டாலினுக்கு இல்லாத விருது என் மீசைக்கு சமம் என கலிங்கபட்டி சிங்கம் உறுமும்

வைரமுத்து தூதுமேல் தூது விட்டு பார்ப்பார்.

இது போக ராமதாஸ், திருமா எல்லாம் ஆளாளுக்கு ஒருவரை காட்டுவார்கள், சைமன் எங்க அண்ணன் காசியானந்தனுக்கு ஏன் கொடுக்கவில்லை என புரள்வார்

ஜெயமோகன் கோஷ்டி ஆசான், தேவதேவன் என புதுபுது தமிழறிஞர்களை எல்லாம் இழுத்து வரும், அதை படித்தால் இதுவா செம்மொழி என தமிழுக்கான அங்கீகாரமே ரத்தாகும் ஆபத்தும் உண்டு

அப்படியான கொடுந்தமிழ் எழுத்தாளர், கவிஞர்கள் இப்பொழுது ஏராளம்

இதெல்லாம் கடந்து தமிழக பாஜகவிடம் நம்ம பக்கம் யாரும் தமிழறிஞர் உண்டா என கேட்டால், தமிழறிஞர் என்ன தமிழிசையே உண்டு என அம்மணி சிரித்தால் என்னாகும்?

பின் யாருக்கு கொடுப்பார்கள்

நாளையே தமிழருக்கு செம்மொழி விருது உண்டு என அரசு அறிவிக்கட்டும், இங்கு ஆளாளுக்கு இவருக்கு கொடு அவருக்கு கொடு என கும்மியடியில் இறங்கமாட்டார்களா?

இதை உணர்ந்தோ என்னமோ தமிழுக்கான செம்மொழி விற்பனர் விருது வழங்கபடவில்லை

தமிழில் ஏகபட்ட தமிழிழின உணர்வாளர்கள் அவர்களின் படைப்பின் மூலம் விருதுவாங்க தகுதி உள்ளவர்கள்

ஆனால் ஒரே ஒருவர் அரசியல் காரணங்களுக்காக புறக்கணிக்க படுகின்றார். தேசிய விருது முதல் பத்ம விருதுவரை அரசியல் ஒன்றே அவருக்கான அங்கீகாரத்தை பறிக்கின்றது

அது , நிச்சயம் Kavignar Thamarai செம்மொழி விருது பெறும் பட்டியலில் அவருக்கும் இடம் உண்டு

செம்மிழியினை கொண்டு பாடல் எழுதும் ஒரே கவிஞர் அவர்தான், செம்மொழியினை 100% பயன்படுத்தும் ஒரே படைப்பாளர் அவர்தான்

ஆனால் அரசியலில் ஊறிவிட்ட அமைப்பில் அதனை எல்லாம் எதிர்பார்க்க முடியாது

செம்மொழி விருது தமிழுக்கு இல்லை என மத்திய அரசு அடுத்த ஆட்டத்திற்கு வழிவைத்தாயிற்று

நிச்சயம் சொல்லலாம் மத்திய அரசு தீபாவளி மூடில் இருக்கின்றது, அது கொளுத்திவிட இங்கோ கடும் ஆரவாரம்

பல புஸ்வானங்கள் பார்த்துவிட்ட நிலையில், இதோ அடுத்த சங்கு சக்கரம் செம்மொழி விருது பெயரில் வருகின்றது

பார்த்து மகிழ மத்திய அரசு ரெடி..

இந்த சர்ச்சை பற்றி எரியும் பொழுது எச்.ராசாவின் அட்மின் கேட்பார், “இங்கு செம்மொழி விருது பெற எவன் இருக்கின்றான், ஒரு பயலுமில்லை..”

அத்தோடு அடுத்த சரவெடி தயார்.