ஸ்ரீ லங்கா வில் புடவையை ஆபாச உடை என்று போராட்டம்

Image may contain: 1 person, standing

இலங்கை சேலை எதிர்ப்பு என்பது விஷயம் என்பது சாதாரண விஷயம் அல்ல, இது பல பின்னணிகளை கொண்டது

விஷயம் கொஞ்சம் ஆழநோக்க வேண்டியது, எவ்வளவு ஆழம் என்றால் 100 ஆண்டுகளுக்கு முன்பானது

அன்று தமிழகமும் இலங்கையும் சைவ பூமியாக இருந்து கிறிஸ்துவ மத இன்ன பிற சக்திகளை எதிர்த்து போராடிகொண்டிருந்தது, அவர்களுக்கு கத்தோலிக்கமும் இங்கு பிரிவினை கிறிஸ்தவமும் சவால்கள்

சைவ பூமி என்றால் சாதி வன்மங்கள் உட்பட எல்லாம் இருந்தன‌

இதனால் இந்து கல்லூரிகளும் உடை கட்டுப்பாடுகளும் அன்றே இருபக்கமும் இருந்தன‌

இங்கு திராவிட சக்தியும், இலங்கையில் இன்னபிற சிக்கலும் வந்த காலத்தில் இவை எல்லாம் அடங்கின‌

இன்று இங்கு திராவிடம் பின்னடைந்து, ஈழத்தில் புலிகட்டுபாடு நீங்கி அமைதியும் திரும்பிய நிலையில் மறுபடியும் மதவாத சக்திகள் தலை தூக்குகின்றன‌

தமிழகத்திலும், இலங்கையிலும் அச்சக்திகள் ஓசைபடாமல் தலை தூக்குகின்றன, மறுபடியும் அவை தங்கள் கரங்களை இறுக்குகின்றன‌

உதாரணம் வேண்டுமென்றால் அங்கிள் சைமன் வேல் தூக்கி முப்பாட்டன் முருகன் என குதிப்பது இதனால்தான்,

அவர் என்ன செய்வார் பாவம், கோலை நீட்டினால் குதித்துத்தான் ஆகவேண்டும்

இப்பொழுதெல்லாம் யாழ்பாணம், கிழக்கு இலங்கையில் இந்து மதவாத சக்திகள் அதிகம், சிவசேனை கூட கடை திறந்து அல்ல கிளை திறந்துவிட்டது

கொஞ்ச நாளைக்கு முன் யாழ்பாண கல்லூரியில் ஆடைகட்டுபாடு வந்ததும், சர்ச்சை வந்ததும் செய்திகள்

இப்பொழுது விவகாரம் கிழக்கு பக்கம் வந்திருக்கின்றது, இஸ்லாமிய பேராசிரியை வேலை செய்யும் இந்து கல்லூரிகளில் அவர்களின் இஸ்லாமிய உடை தவிர்த்து சேலை அணிய நிர்பந்திக்கபட்டிருக்கின்றனர்

விஷயம் இங்கிருந்துதான் தொடங்கிற்று

இலங்கையில் இன ரீதியான மோதல் உண்டே தவிர ஆடை கட்டுபாடு எல்லாம் எக்காலமும் இல்லை. இஸ்லாமிய நிறுவணங்களில் இந்துபெண்கள் சேலை கட்டி செல்லும்பொழுது ஏய் “ஹபாயா” ஆடை அணிந்து வா என எந்த இஸ்லாமியனும் சொன்னதில்லை

இப்பொழுது இஸ்லாமிய பெண்கள் சேலை கட்டிவரவேண்டும் என மிரட்டபடும்பொழுதுதான், எங்கள் மத உடை ஏன் மாற்றபட வேண்டும் என சர்ச்சை வெடித்தது அது சேலை ஆபாசமா? இஸ்லாமிய உடை ஆபாசமா என திசை திரும்பி செல்கின்றது

இஸ்லாமிய பெண்கள் இந்துக்கள் கல்லூரியில் இஸ்லாமிய உடையில் வர தடை விதிக்கபட்டு சிலர் அதை கொச்சைபடுத்தியதிலே விஷயம் வெடித்தது

சேலை, ஹபாயா இரண்டுமே கண்ணியமான உடை என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை

எனினும் இலங்கையில் பரவும் இந்துத்வா பிற்போக்கு சக்திகள் இதனை சர்ச்சையாக்குகின்றன‌

இந்துத்வா தன் கொடுங்கரங்களை இலங்கையில் பரவிடுவதை சிங்களம் ரசிக்குமா என்றால் ரசிக்காது, பின் ஏன் ஹம்பாந்தோட்டா சீனன் பக்கம் செல்லாது

வரலாற்றை மாற்ற நினைக்கின்றோம் என தமிழகத்தில் எச்.ராசா , எஸ் வீ சேகர் எல்லாம் அடிவாங்கலாம், ஆனால் அது ஈழத்தில் ரகசியமாக செய்யபடுகின்றது

இங்கும் அங்கிள் சைமன் முப்பாட்டன் முருகன், பெரியாத்தா கண்ணகி என குஸ்திகாட்டும் விவகாரமும் இதுதான்

முருகனுக்கும், கண்ணகிக்கும் இலங்கையில் பெரும் ஆலயங்கள் உண்டு

எல்லா கணக்குகளையும் ஒரே புள்ளிக்கு கொண்டுவாருங்கள், பெரும் திட்டத்தோடு இந்துத்வா கும்பல் ஊடுருவியிருப்பது தெரியும்

அது இங்கு காமெடியானாலும் இலங்கையில் பற்றி எரிய தொடங்கிவிட்டது

இதனை மறைத்துவிட்டு சேலை ஆபாசம் என இஸ்லாமியர் பொங்குகின்றார்கள் என இங்கு இஸ்லாமிய வெறுப்பு விதைக்கபடுகின்றது

இச்சதியில் தமிழர்கள் மிக கவனமாக இருப்பது நல்லது, முப்பாட்டன் முருகன் என குதிப்போர் யாரின் கைகூலி என இனியாவது தமிழகம் புரிந்துகொள்ளட்டும்

தமிழர் எல்லாம் இந்துக்கள், இந்துக்களாக மதரீதியாக எழும்பினால் தமிழன் உலகாள்வான், விண்வெளி ஆள்வான் எனும் விஷ கருத்து விதைக்கபடுகின்றது

இந்த வீரதமிழர் முண்ணணி, வீர சைவர், வீர வைணவர் என பல கோஷ்டிகள் உருவாவது இதனால்தான்

பெரியார், கலைஞர் போன்றோரை இவர்கள் குறிவைத்து அடிப்பதும் இந்த பின்னலில்தான்.

இது இப்பொழுது உணராவிட்டாலும் விரைவில் நிச்சயம் உணர்வீர்கள்

 

 


Image may contain: 1 person, crowd

 

ஸ்ரீ லங்கா வில் புடவையை ஆபாச உடை என்று போராட்டம் : செய்தி

இலங்கையர்கள் ஆடையில் முன்பு சேலை முக்கிய பங்கு வகித்தாலும், வெள்ளையர வரவுக்கு பின் அவர்கள் பாணி மாறியது குறிப்பாக வடக்கில் தமிழர் இடங்களில் மாற்றம் வந்தது அது சிங்கள தரப்பிற்கும் வந்தது

மிக மாடலாக உடை அணிபவர்கள் என அன்றே அவர்களுக்கு பெயரும் இருந்தது

என்னதான் மார்டன் என்றாலும் பட்டு முதலான சேலைகளுக்கு இன்றும் அங்கே மார்க்கெட் தனி, பெரும் சந்தை அது

சேலை ஒன்றும் ஆபாச உடை அல்ல, அணியும் விதத்தை பொறுத்தது அது. முறையாக அணிந்தால் அதை விட பாதுகாப்பான உடை பெண்களுக்கு இல்லை

இப்பொழுது என்ன சிக்கல் என்றால், இன்று இலங்கையின் மிக முக்கிய தொழில்களில் இன்று ரெடிமேட் ஆடைகள். அந்த கும்பலுக்கு எப்படி சேலை பிடிக்கும்?

அதனால் ஆளாளுக்கு இறங்கிவிட்டார்கள்

இப்பொழுது உலகில் எங்கு போராட்டம் நடந்தாலும் அதன் பின்னால் சில வியாபாரி இருக்கின்றான். இலங்கை மட்டும் விதிவிலக்கா என்ன?

நல்ல வேளையாக இந்த போராட்டம் இலங்கையில் நடக்கின்றது

தமிழகம் என்றால் கேட்க வேண்டுமா? சேலை கட்டும் போராட்டம் என சொல்லி, சில பெண்களுக்கு அவர்கள் வராவிட்டால் ஆண்களுக்கே நடுரோட்டில் சேலை கட்டுவார்கள் போராளிகள்.

சகிக்குமா?