சொன்னபடி வோட்டுக்கு பணம் தரவில்லை தினகரன்

Image may contain: 2 people, people smiling, text

வோட்டுக்கு பணம் தரவில்லை தினகரன் என ஆர்.கே நகரில் பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றனர் பொதுமக்கள்

இந்த மாபெரும் அவமானத்தை கண்டும் காணாமல் இருக்கின்றது தேர்தல் ஆணையம்

அதன் பணி தேர்தலை நடத்துவதோடு சரி என நினைத்துவிட்டது போல, இப்படி ஆம் பணம் தருவதாக சொன்னார் அதனால் வாக்களித்தோம் என பகிரங்கமாக சொன்னபின்னும் , ஆதாரங்களோடு வந்து நின்றபின்னும் ஏன் தேர்தல் கமிஷன் தூங்குகின்றது

நல்ல நாடாக இருந்தால் இந்நேரம் தினகரனின் எம்.எல்.ஏ பதவி முடக்கபட்டிருக்க வேண்டாமா?

ராமர்கோவில் கட்டுவோம், ஆளுக்கு 15 லட்சம் தருவோம் என ஆட்சிக்கு வந்த கட்சி இன்னும் ராமர்கோவி கட்டியா இருக்கின்றது?

இல்லை 15 லட்சம் தந்துவிட்டதா?

அதுவே ஆசைகாட்டி ஏமாற்றும் கட்சி எனும்பொழுது தினகரனை அது எப்படி தண்டிக்கும்?

எனினும் தேர்தல் ஆணையம் இந்த ஆர்.கே நகர் உரிமை மீட்பு போராளிகளின் கோரிக்கையினை கொஞ்சம் கவனிப்பது நல்லது