இந்த எஸ்.வீ சேகரை இன்னும் பிடிக்கலையா?

Image may contain: 1 person, close-up

“எது எப்படி போனாலும் தாமரை மலர்ந்தே தீரும்னு சொல்லிட்டு, பலரை கலாய்சிட்டு அட்டகாசமா அரசியல் செய்திட்டு இருந்தேன்

இந்த எச்.ராசா எஸ்வீ சேகர் அழிச்சாட்டியத்துல எல்லாம் போச்சி, இதுல இடையில கவர்ணர் வேற வ்ந்து நம்மள தமிழ்நாடே மறந்துட்டு

அடேய் நீங்கல்லாம் உருப்படவே மாட்டீங்க, நல்லாவே இருக்கமாட்டீங்க, தமிழ்நாடு பாஜக மாதிரியே நாசமா போயிருவீங்க..”


கிரிக்கெட் ரசிகர்கள் என்றால் ஒரு விஷயம் உங்களுக்கு புரியும், 98 ரன்களை யாரோ அடித்து வைக்க, கடைசியில் வந்தவன் 2 ரன்களை அடித்துவிட்டு நானே 100 ரன்னும் அடித்தேன் என்றால் எப்படி இருக்கும்

அவனை பிடித்து கிரிக்கெட் ஸ்டெம்பால் மண்டையில் அடிக்க தோன்றாதா?

அப்படித்தான் காங்கிரஸ் அரசு 98% சதவீத மின் தேவையினை பூர்த்தி செயதது, மீதமுள்ள 2% பூர்த்தி செய்த மோடி அரசு தாங்கள் 100% மின் தேவையினை பூர்த்தி செய்ததாக தம்பட்டம் அடிக்கின்றது

இதற்கும் பக்தாள்ஸ் ஆனந்த கண்ணீர் வடித்துகொண்டிருக்கின்றார்கள்

 


இந்த எஸ்.வீ சேகரையே பிடிக்க முடியா காவல்துறையின் பழைய சாதனைகள் சந்தேகத்திற்குரியதாகின்றன‌

சந்தண வீரப்பன் தானாக வந்து சுட்டு செத்திருக்கலாம், வாய்ப்பிருக்கின்றது

இமாம் அலி கூட தவறுதலாக தன்னை தானே சுட்டிருக்கலாம்

எஸ்.வீ சேகரையே பிடிக்க முடியாத காவல்துறையா அந்த ராமஜெயம் கொலையாளிகளை பிடிக்க போகின்றது

இனி எவனாவது இது ஸ்காட்லாந்து யார்டு என கிளம்பட்டும், அன்று இருக்கின்றது