அரசியல் என்பது அறத்திற்கு மட்டுமல்ல, மானத்திற்கும் அப்பாற்பட்டது

கலைஞரின் சாதியினை பற்றி அவதூறு கிளம்புவது முதல் முறை அல்ல, வரலாறு எங்கும் காணகிடக்கின்றது

எப்பொழுதெல்லாம் அம்மனிதன் மீது குற்றம்சாட்ட வழி இல்லையோ அப்பொழுதெல்லாம் அவன் சாதிபற்றி தெரியாதா என 1960களிலே கேட்டார்கள்

பேசவே நாகூசும் வார்த்தைகள் எல்லாம் அவர் மீது வீசபட்டன‌

அவரே சொன்னது போல “விவரமறிந்த வயதியிலிருந்தே இழித்தும் பழித்தும் பேச கூடிய சாதியில் பிறந்தவன் நான், எவ்வளவோ அவமானங்களை சாதி இழிவில் சுமந்து பெரியாரின் கொள்கையால் கடந்தவன்

இழித்தும் பழித்தும் பேசபடும் சொற்கள் எனக்கு புதிதல்ல”

கலைஞரின் அணுகுமுறை அப்படித்தான் இருந்தது, பழுத்த அனுபவம் இருந்ததால் எல்லாவற்றையும் கடந்து சென்றார்

சிவி சன்முகம் என்பருக்கு ஜெயலலிதாவின் கால் செருப்பு தவிர ஏதும் தெரியாது என்பதால் அவதூறுகளை வீசியிருக்கின்றார்

ஆனால் இதே சன்முகம் ஜெயலலிதாவின் கடந்த காலங்களை பற்றி பேசுவாரா என்றால் பேசமாட்டார், இங்கு இழிவாக பேசிய வார்த்தைகள் பல அங்கும் பொருந்தும்

அது இருக்கட்டும்

திமுக ஏன் அமைதியானது, ஒரு சாதிய வன்கொடுமை வழக்குமா போடகூடாது?

ஆதாரமாக அமைச்சர் சாதியினை பழித்தது ஆடியோ வீடியோ என வலம் வருகின்றது, என் வழக்கு போடவில்லை

விஷயம் இருக்கின்றது

கொஞ்சநாளைக்கு முன்பு திமுகவினை மறைமுகமாக “உலகின் பழமையான தொழில் செய்ய போங்கள், நாதஸ்வரம் வாசிக்க செல்லுங்கள்” என வெறுப்பின் உச்சத்தில் சாடிய வைகோ அவர்கள் அருகில் இருக்கின்றார்

தங்களை உலகின் ஆதிகால தொழிலை செய்ய சொன்ன வைகோவினை அருகில் வைத்துகொண்டு, சிவி சன்முகத்தை எப்படி சாடுவது? என நெளிகின்றது திமுக தரப்பு

இன்னொரு வாய்ப்பும் உண்டு

கொஞ்ச நாளில் ஆட்சி இழந்து அரசு கவிழும்பொழுது இதே சன்முகம் தியாக தலைவி அஞ்சுகம் பெற்றெடுத்த புதல்வனின் கட்சியில் ஐக்கியமாகும் காலமும் வரலாம்

அரசியலில் எதுவும் சாத்தியம் என்பதால் திமுக கனத்த மவுனம் காக்கலாம்

அரசியல் என்பது அறத்திற்கு மட்டுமல்ல, மானத்திற்கும் அப்பாற்பட்டது