அந்த கழுத்தறுப்பு சம்பவத்தில் என்னதான் நடந்தது?
அந்த கழுத்தறுப்பு சம்பவத்தில் என்ன நடந்திருக்கின்றது என்றால் ஒரு இந்து பெண்ணும், ஷபீர் எனும் இஸ்லாமிய பையனும் காதலித்திருக்கின்றார்கள்
முதலில் நன்றாக சென்ற காதலில் பின் கண் தெரிந்து மதம் தடையாக இருப்பது தெரிந்திருக்கின்றது
அப்பெண் விலக முயற்சித்திருக்கின்றாள், காரணம் கேட்டபொழுது மதம் பற்றி சொல்லியிருக்கின்றாள்
அவன் அவளை மதம் மாற சொல்லியிருக்கின்றான், அவளோ அவனை மதம் மாற சொல்லியிருக்கின்றாள்
விஷயம் இழுத்துகொண்டே சென்றது,பல நாள் சண்டை எல்லாம் வந்து , பஞ்சாயத்து எல்லாம் நடந்திருக்கின்றது
காதலுக்காக நீ மாறினால் என்ன என இருவரும் மாறி மாறி சொல்லிகொண்டே இருந்திருக்கின்றார்கள்
ஒரு கட்டத்தில் அவன் அவளை பேனா கத்தியால் குத்திவிட்டான்
அந்த கத்தி யார்கொடுத்தது தெரியுமா? அவள் அவனுக்கு கொடுத்த காதல் பரிசு
அவளுக்கான ஆபத்தை அவளே தேடி, அவனுக்கு ஆயுதமும் கொடுத்திருக்கின்றாள்
இரு காதலர்களுக்கு இடையிலான மத சண்டை என பத்த்திரிகை பஞ்சாயத்து தீர்ப்பாகின்றது
ஆனாலும் மதம் மாறா உன்னை கழுத்தறுப்பேன் என்பது ஐஎஸ் இயக்கத்தின் கொடூரத்தை நினைவுபடுத்துகின்றது