யோகிசாமி உபியில் முதல்வ‌ராவதில் என்ன ஆச்சரியம்?

உபியில் ஒரு அமைச்சருக்கு நற்பெயர் எடுக்க ஆசைபட்டிருக்கின்றது, எப்படி என்றால் இவர் சாதி பார்க்கா மாமனிதர், இரண்டாம் காந்தி என்றெல்லாம் அடைமொழி சேர்க்க ஆசைபட்டிருகின்றார்

உடனே தலித் வீட்டில் போய் சாப்பிடுங்கள், ராகுல்காந்தி போல பெயர் வாங்கிவிடலாம் என ஆலோசனை சொல்லி இருகின்றார்கள்

இவரும் தலித் வீட்டிற்கு கிளம்பி போய் சாப்பிட வந்திருக்கின்றேன் என்றிருக்கின்றார், அந்த தலித் அம்மணியும் சமைத்திருக்கின்றது

நன்றாக பேசிகொண்டிருந்த அமைச்சருக்க்கு சாப்பிட அழைத்ததும் “அய்யோ தலித் வீட்டு உணவினை சாப்பிடுவதா?” என மறுத்து தனக்கான பிரத்யோக உணவை கொண்டுவர சொல்லி உண்டிருக்கின்றார்

இது தங்களை அவமானபடுத்திய விஷயம் என தலித்துகள் பொங்குகின்றனர்

சும்மா இருந்தவர்கள் வீட்டுக்கு போய், உங்களோடு உண்ண போகின்றேன் என சொல்லிவிட்டு அவர்களை அவமானபடுத்திவிட்டு வந்திருக்கின்றார்

கேட்டால் “உண்ணத்தானே வருவேன் என்றேன், உங்கள் சமையலை சாப்பிடுவேன் என்றா சொன்னேன்?” என வடிவேலு காமெடி ரகத்தில் கோபம் வேறு அன்னாருக்கு வந்திருக்கின்றது.

வோட்டு அரசியலில் எவ்வளவு தத்ரூபமக நடிக்க வேண்டும்? இவரோ சொதப்பி தள்ளி இருக்கின்றார்

விஷயம் பற்றி எரிகின்றது

“டேய் ராகுல் காந்தி குடிசையில் அவர்களோடு கூழ் குடித்தார், நீங்களோ அவர்கள் உணவினை தொட கூட விரும்பவில்லை, ராகுல் மகாத்மாடா” என காங்கிரஸ் தரப்பு ஆர்ப்பரிக்கின்றது

தனக்கு நற்பெயர் வரவேண்டும் என திட்டமிட்ட அமைச்சர், ராகுலுக்கு மிக நற்பெயரை வாங்கிதந்துவிட்ட சோகத்தில் அமர்ந்திருக்கின்றார்.

இந்த உபி மபி எல்லாம் ஒருமாதிரியானவர்கள் வசிக்கும் ஏரியா போல‌

தமிழ்சினிமாவில் கற்பனையில் வரும் காமெடிகள், கொலைகள் எல்லாம் அவர்கள் அனாசயமாக நிஜத்திலே நடத்துகின்றார்கள்

அந்த யோகிசாமி உபியில் முதல்வ‌ராவதில் என்ன ஆச்சரியம்? ஆகாவிட்டால்தான் ஆச்சரியம்