வரலாற்று சிறப்புமிக்க இடங்களை எல்லாம் தனியார் பராமரிக்க வழி செய்துவிட்டது
இந்த மத்திய அரசு வரலாற்று சிறப்புமிக்க இடங்களை எல்லாம் தனியார் பராமரிக்க வழி செய்துவிட்டது
செங்கோட்டைக்கு டால்மியா இன்னும் பல கோட்டைகள், அரண்மனைகளுக்கு எல்லாம் ஆளாளுக்கு ஒரு பராமரிப்பாளர்களை நியமிக்கின்றார்கள்
பராமரிப்பு செலவினை ஏற்கும் நிறுவணங்கள், அங்கு தங்கள் வியாபாரத்தையும் விளம்பரத்தையும் கவனிக்கும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை
ஆனால் அதே நேரம் வரலாற்று இடங்களை தனியார் பராமரிக்க கடும் சட்டங்கள் அவசியம், ஏற்கனவே சிலை திருட்டு அதிகம் நடக்கும் நாடு இது
இங்கு வரலாற்று இடங்கள் ஏராளம், இதனால் தனியாருக்கு விடுவது ஒன்றும் தவறல்ல, பல நாடுகளில் செய்யும் விஷயம்தான்
இங்கு பொதுவாகவே வரலாற்றை பாதுகாக்கும் வழக்கம் இந்தியர்களுக்கு குறைவு, காலத்தால் முந்தைய கோட்டைகளை பொருட்களை பொக்கிஷங்களை கொஞ்சமும் சீண்டாத சமூகம் இது
இப்படி ஒரு வரலாற்று அறிவில்லா பொறுப்பில்லா சமூகத்தை எங்கும் காண முடியாது
இந்தியாவில் தனியார் வரலாற்று இடங்களை மீட்பதும் பாதுகாப்பதும் இது புதிதல்ல இங்கு திப்புவின் வாளை கூட மல்லையாதான் மீட்டார்,
இங்கும் புராதான கோவில்கள் பலவற்றிற்கு தனியார்தான் தாங்கி நிற்கின்றார்கள். டிவிஎஸ் குழுமமும் தினதந்தி குழுமமும் அதில் குறிப்பிடதக்கவை
எப்படியோ பாபர் மசூதி போன்ற வரலாற்று தலங்களை இடித்து போட்ட கும்பலுக்கு, சில வரலாற்று தலம் மீது அக்கறை வந்திருப்பது ஆச்சரியம்
தமிழகத்திலும் இதனை செய்யலாம், செஞ்சி கோட்டை முதல் சின்னமலை கோட்டைவரை அழிந்து கிடக்கின்றது
சிலர் ராஜராஜன் சமாதி என ஒரு சமாதியினை பொங்குகின்றார்கள், சைவர்கள் புதைக்கபடுவதில்லை
தமிழக மன்னர்கள் கோவிலிலே வாழ்ந்தவர்கள், தனியாக அவர்களுக்கு அரண்மனை இல்லை
பாண்டிய மன்னனின் அவை மீனாட்சி ஆலயத்தில் நடந்ததே அதற்கு சான்று, அதனால் அவர்கள் அரண்மனை கட்டவில்லை, ஆனால் அந்த ஆலயங்களும் வரலாற்று சின்னங்கள்
அரண்மனை கலாச்சாரம் இங்கு நாயக்கர் காலத்திலே வந்தது அப்படியே மதுரை திருச்சி தஞ்சையில் எல்லாம் மகால் வந்தது
அவைகளும் இன்று முழுபராமரிப்பு இல்லை காக்கபட வேண்டும்
இங்கும் பல இடங்கள் காக்கபடவேண்டியவை
அரசு தனியார் உதவியுடன் வரலாற்று சின்னம் காக்கபடும் என சொல்லியிருக்கும் நேரம் சங்கமும் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க இடத்தை பராமரிக்க உரிமை கோருகின்றது
தாஜ்மகாலை போலவே அதுவும் உலக புகழ்கொண்டது, ஆனால் அடையாளமின்றி நிற்கின்றது.
வருங்கால உலகம் அதனை ஓடிவந்து மோனாலிசா ஓவியம் போல, ஜோன் ஆப் ஆர்க்கின் வீடு போல தேடும்பொழுது அங்கொரு நினைவாலயம் கட்டியிருக்கபட வேண்டும்
இல்லாவிட்டால் வரலாற்று பிழை ஆகிவிடும்
ஆம் தலைவி குஷ்பு அவதரித்த அந்தேரியில் அவரின் பிறந்த வீட்டை வரலாற்று சின்னமாக அறிவித்து சங்கத்திடம் ஒப்படைக்கும்படி கோருகின்றது
அதனை பல கோடிகள் செலவழித்து பராமரிக்க சங்கம் தயார், அப்படியே சென்னை பட்டினபாக்கம் தலைவி வீடும் சிறப்பு வரலாற்று பகுதியாக அறிவிக்கபட வேண்டும்
தலைவி பிறந்த வரலாற்று சிறப்புமிக்க இடம் சங்கத்திடம் ஒப்படைக்கபடவில்லை என்றால் மாபெரும் போராட்டம் வெடிக்கும்