இன்று உலக பத்திரிகை சுதந்திர நாள்
இன்று உலக பத்திரிகை சுதந்திர நாளாம்
இந்தியாவில் ஆயிரம் குறைபாடுகள் இருந்தாலும் பத்திரிகை சுதந்திரம் என்பது உண்மையில் மிக அதிகம்
அதை அவர்கள் எப்படி பயன்படுத்துகின்றார்கள் என்பது வேறு விஷயம், சில ஜால்ராக்கள் மிக சில உண்மை பத்திரிகைகள், பணம் குவிக்கும் பத்திரிகை என பல இருந்தாலும் தடை இன்றி எழுத முடிகின்றது
கவுன்சிலர் முதல் மோடி வரை எழுதமுடிகின்றது, அமைச்சர்களை கலாய்க்க முடிகின்றது
இது எத்தனை நாட்டில் சாத்தியம் என்றால் ஏராளமான நாடுகளில் இல்லை
அரசின் கண்ணசைவின்றி ஒரு எழுத்து எழுதமுடியாது, உரித்து தொங்கவிட்டு முடித்துவிடுவார்கள்
இந்த அருமையான தேசத்தில் எல்லாமே சாத்தியம், முகநூல் வந்தபின் எல்லோரும் பத்திரிகையாளர் ஆனது வேறு விஷயம் என்றாலும் அதை எழுதும் சுதந்திரம் இருக்கின்றது
சுதந்திரமாக எழுதும் வெகுசில பத்திரிகையாளர்களுக்கும், முகநூலில் விளாசும் ஒருநபர் பத்திரிகையாளருக்கும் இந்நாளில் வாழ்த்துக்கள்
இத்தேசம் கொடுத்திருக்கும் சுதந்திரம் கொஞ்சமல்ல, சில நேரங்களில் அது அளவுக்கு அதிகமாக செல்வதுதான் ஆபத்து