நிர்மலா சீதாராமன் மீது திமுகவினர் தாக்கியது விரோதத்தில் அல்ல
நிர்மலா சீத்தாராமன் கார் தமிழகத்தில் தாக்கபட்டிருகின்றது. அவர் வரும்பொழுது திமுகவினர் கருப்புகொடி காட்டினர் என்பதால் அவர்களில் சிலர் கல்வீசி இருக்கலாம் என்கின்றார்கள்
எஸ்.வீ சேகர் தலைமறைவு என்பதால், ஒருவேளை கலவரம் ஏற்படுத்தி அந்த இடைவெளியில் வெளிநாட்டுக்கு தப்பிக்க அவரே கல்வீசி இருக்கலாமோ என்றேல்லாம் யோசிக்க கூடாது
இந்த கல்வீச்சு சொல்வதென்ன?
இங்கு யாரெல்லாம் தேசியகட்சியினர் திமுகவினரால் தாக்கபட்டார்களோ அவர்களுடன் எல்லாம் பின்னாளில் திமுக கூட்டணி வைத்தது
இதற்கு ராஜாஜி, இந்திரா என ஏகபட்ட உதாரணங்களை சொல்லலாம், முதலில் அடிப்பார்கள் பின் கூட்டணியாக நிற்பார்கள்
இதனால் நிர்மலா சீதாராமன் மீது திமுகவினர் தாக்கியது ஒன்றும் விரோதத்தில் அல்ல
மாறாக “அடுத்தமுறை ஒழுங்காக கூட்டணிக்கு வரவேண்டும் சரியா?” எனும் அன்பான அழைப்பு என்பதே விஷயம்
இந்திராகாந்தியினை அழைத்தது போலவே இப்பொழுது பாஜகவினையும் அழைக்கின்றார்கள்.