மேற்கு தொடர்ச்சி மலை இன்றி அமையாது தமிழகம்
இந்த மேற்கு தொடர்ச்சி மலையின் உயரத்தினை குறைக்க வேண்டும் என்றொருவன் வழக்கு தொடர்ந்திருகின்றான்
எதற்காக என்றால் அம்மலை அரபிகடல் மேகங்களை தடுத்து கேரளாவிற்கு மழை கொடுக்குமாம், உயரத்தை குறைத்தால் மேகம் தழிழகம் வருமாம்
இந்த மாபெரும் அறிவாளி யார் என தெரியவில்லை, தெரிந்தால் தலை கீழாக தொங்கவிட்டு சில விஷயம் கேட்கலாம்
மலையினை கன்னியாகுமரியிலிருந்து கன்னடம் வரை இடிப்பது சாத்தியமா? அப்படி இடித்தால் என்னாகும்?
மலைவாழ் உயிரினங்களை விடுங்கள், இந்த தாமிரபரணி, பெரியாறு, அமராவதி என எத்தனை ஆறுகள் காயும்? குற்றால்ம் வரை நின்றுபோகும்
அம்மலை நிச்சயம் கேரளாவினை வாழவைக்கின்றது ஆனால் தமிழகமும் அதுவாலே வாழ்கின்றது
அம்மலை இன்றி அமையாது தமிழகம்
சரி மலையினை இடித்து மேகம் இங்கு வந்தால் கூட எப்படி தடுப்பார் இவர்? கிழக்கே இன்னொரு பெரும் சுவர் பல்லாயிரம் அடி உயரத்திற்கு எழுப்புவாரா?
இல்லை தான்சேன் குன்னகுடி வைத்தியநாதன் ஸ்டைலில் இசையால் நிறுத்தி பொழிய வைப்பாரா?
கிழக்கே பெய்யும் மழை மேற்கே ஆறாக வருமா? தமிழகத்தை மேற்கு பள்ளமாக திருப்ப இவர் மச்ச அவதாரத்தில் கடலிலா குதிப்பார்?
இந்த பைத்தியகாரதனமான பேச்சுக்களை தும்பிக்கள்தான் பேசும், அவைகள்தான் இப்படி உளறிகொண்டிருந்தன
இப்பொழுது அதையும் நம்பி எவனோ கோர்ட்டுக்கும் சென்றுவிட்டான்
முதலில் இதற்கும் வழக்காட வந்த வக்கீலின் அனுமதியினை ரத்து செய்துவிட்டு அவனையும் வக்கீலையும் ஜாமீனே இல்லாமல் சிறையில் தலைகீழாக சில நாள் தொங்கவிட்டு அதன் பின் குடியுரிமையினை ரத்து செய்து கடலில் படகேற்றி விடவேண்டும்
இப்படிபட்ட சுத்த முட்டாள்கள் இத்தேசத்திற்கு தேவையே இல்லை
வெறுப்பு அரசியல் எவ்வளவு கொடூர சிந்தனைக்கு இவர்களை தள்ளிவிட்டது பார்த்தீர்களா? இவர்கள்தான் தமிழகத்தை ஆள ஆசைபடும் கூட்டம்
இவர்களிடம் அதிகாரம் சிக்கினால் என்னாகும்? எல்லாம் சுடுகாடாகும்