நடிகர் விவேக் சொன்னது தவறா?

Image may contain: 1 person

 

தமிழகத்தில் ஒரே ஒரு அறிவாளி நடிகன் உண்டென்றால் அது விவேக் ஒருவர்தான். அவரை மட்டும்தான் சொல்லமுடியும்

அவரை ரசிக்கவும், பின் தொடரவும் அறிவு வேண்டும், பல விஷயம் தெரிந்திருக்க வேண்டும்

வடிவேலுவின் வெளிச்சமான‌ திறமையில் விவேக்கின் அறிவொளி மங்கலாக தெரிந்திருக்கலாமே தவிர விவேக்கின் ஞானம் கொஞ்சமல்ல‌

அவரளவு உலக அறிவும், சமூக அறிவும் வரலாறும் தெரிந்த ஒருவனை திரையுலகில் காட்டிவிடுங்கள் பார்க்கலாம்

அறிவாளிகள் விமர்சிக்கபடுவது தமிழகத்தில் புதிதல்ல‌

என்னய்யா சொல்லிவிட்டார்?

சமையலும், வாகனம் ஓட்டுதலும் வாழ்வின் மிக இன்றிமையாத விஷயங்கள். உலகெல்லாம் திரிந்தவனுக்கு அதன் அவசியம் புரியும்

தந்தையோடு இருந்து தொழில் கல் என்றால் வருடம் முழுக்க அல்ல, மாறாக இந்த விடுமுறையில் ஓரளவேனும் கற்றால் அது தொழிலாக பலனளிக்குமோ இல்லையோ தந்தையோடு மகிழ்ந்த அந்நினைவுகளை நிலைக்க வைக்கும்

இன்றும் பலர் அக்காலத்தில் தாய்தந்தையரோடு வயலில் வேலை செய்த சுகமான காலங்களை நினைத்து பார்க்கவில்லையா? அவை எல்லாம் வாழ்வியல் உணர்வுகள், ஒவ்வொருவனும் தந்தையோடு இருந்து உணரவேண்டிய விஷயங்கள்

கலைஞரே தன் இறுதிகாலங்களில் முத்துவேலரோடு வயலில் நின்ற காட்சிகளை உருகி எழுதியிருந்தார்

அவை எல்லாம் தந்தைக்கும் மகனுக்குமான ஏக்க உணர்வுகள். இப்படி விடுமுறையிலாவது தந்தையோடு வேலை செய்தால்தான் பின்னாளில் அந்த நினைவுகள் எஞ்சி நிற்கும்

வாழ்வின் கடைசிவரை எஞ்சியிருப்பது தந்தையோடு பழகிய நினைவுகளே, அதை யாராவது மறுக்க முடியுமா?.

தந்தையினை பிரிந்த ஒவ்வொருவனும் ஒவ்வொரு நாளும் சில நிமிடமாவது அவரை நினைத்து பார்க்கின்றான்

நெஞ்சை தொட்டு இல்லை என எவனாவது சொல்லட்டும் பார்க்கலாம்? அந்த நினைவுகளின் வலிமை அப்படி

உருக்கத்திற்காக சொல்லவில்லை, மகனை பிரிந்த ஏக்கம் அவருக்கும் உண்டு. பிற்காலத்தில் மகன் தந்தையினை நினைத்து ஏங்க வேண்டியதை அவர் மகனை நினைத்து ஏங்குகின்றார்

அந்நினைவுகள் அவரின் எழுத்தில் வந்திருக்கலாம்

விடுமுறையில் தாயுடன் சமையல் படியுங்கள் என சொல்வதா தவறு? அட பதர்களா?

நேரத்திற்கு சோறுகிடைக்கும் சோம்பேறிகளுக்கு சமையலின் அவசியம் புரியுமா?

சைனா, ஜப்பானில் இருநாள் அலையவிட்டால் சமையலின் அவசியம் புரியும்.

அவர் ஒன்றும் பெரும் தவறாக ஒன்றும் சொல்லவில்லை, அவரை புரிந்துகொள்ள முடியாவிட்டால் விட்டுவிடலாம்

உங்கள் கருத்தை ஆமோதிக்கின்றோம் மிஸ்டர் விவேக். எங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் என்ன சொல்ல விரும்புவோமோ அதனைத்தான் நீங்களும் சொல்லியிருக்கின்றீர்கள்

விமர்சிக்கும் இந்த பதர்களை விடுங்கள், இப்பொழுதும் கவுசல்யாவிற்கு வயது என்ன? திருமணம் ஆனதா இல்லையா என் கவலைபடுபவர்களுக்கு உங்கள் அருமை தெரியாது

நீங்கள் சொன்னது முற்றிலும் சரி என அனுபவத்தில் உணர்ந்த நாங்கள், உங்கள் கரங்களை நாங்கள் வலுபடுத்துகின்றோம்

இந்த பதர்களை தூர தள்ளுங்கள்

தாயோடு அறுசுவைபோகும், தந்தையோடு அறிவு போகும் என சொல்லிவைத்தனர் பழந்தமிழனர்

அந்த பழந்தமிழர் சொன்னதை நடிகர் விவேக் இந்த கோடை விடுமுறையில் தவறவிடாதீர்கள் என சொன்னது தவறா?