ராஜஸ்தானில் கடும் மணல் புயல்
ராஜஸ்தானில் கடும் மணல் புயல் வீசுகின்றது, இது அண்டை மாநிலங்களில் எல்லாம் கடும் சேதத்தை ஏற்படுத்தியாயிற்று
100 பேருக்கு மேல் பலி என்கின்றார்கள். அரபு நாட்டு பாலைவனங்களில் அடிக்கடி கோரதாண்டவம் ஆடும் இப்புயல் என்னமோ ராஜஸ்தான் பக்கம் வந்திருக்கின்றது
அரேபியர் அனுபவசாலிகள், அவ்வளவு அனுபவமில்லா வட இந்திய மக்கள் சிக்கிகொண்டார்கள்.
இந்த ராஜஸ்தானில்தான் தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுத செல்ல வேண்டுமாம்.
என்ன செய்யலாம்?
எடப்பாடி பழனிச்சாமி, செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் போன்றோர் கொண்ட குழுவினை முதலில் அனுப்பி பார்க்கலாம்
அவர்கள் பிழைத்தால் மாணவர்கள் செல்லட்டும்
கிராமங்களில் ஏதும் சண்டை என்றால் கிழவிகள் மண்வாரி தூற்றி மண்ணாய் போ என்பார்கள், அங்கே இயற்கை மண்வாரி தூற்றி கொண்டிருக்கின்றது
ஒருவேளை மத்திய அரசை தூற்றுமோ?
தமிழகம் மனம் வெம்பி கதறி வெறுப்பில் செய்ய விரும்புவதை ராஜஸ்தானின் சூறைகாற்று செய்துகொண்டிருக்கின்றது