நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் மாணவர்கள்… ஆட்டோவில் செல்லும் வைகோ..
நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்கு செல்ல இருக்கும் மாணவர்களுக்கு தமிழக மக்களில் பலர் உதவ வந்தாயிற்று
ஜெய்ப்பூர் தமிழ்சங்கம் முதல், இங்கிருக்கும் பலர் தனியாகவும் உதவ முன்வந்திருக்கின்றார்கள்
நிச்சயம் வாழ்த்துகுரிய விஷயம்
இனி அரசுகளை எதிர்பார்த்து நிற்பது அர்த்தமில்லா விஷயம் என பொதுமக்கள் நினைக்க ஆரம்பித்து, நம் கையே நமக்கு உதவி என கிளம்பிவிட்டார்கள்
அரசியல் விளம்பரம் இன்னும் பல விளம்பரங்களை தாண்டி உண்மையான சேவை நோக்குடன் செயல்படும் இவர்களை வாழ்த்துவோம்
அரசுகளுக்கு இதை விட அவமானம் ஏதுமில்லை. மக்கள் கொஞ்சமும் இந்த அரசுகளை சட்டை செய்யவில்லை என்பது அவர்களுக்கு மாபெரும் அவமானம்.
அரசுகள் செத்துவிட்டதாகவே மக்கள் கருதுகின்றார்கள் என்பதே இதற்கான அர்த்தம்
உதவிகள் குவிகின்றன, இங்கு மானிட நேயமும் கல்விக்கு உதவும் மனப்பான்மையும் கொஞ்சமும் குறையவில்லை என்பது புரிகின்றது
நிச்சயம் இதை நினைத்து பெருமைபடலாம்
என்றேல்லாம் இங்கு சோதனைகள் வருமோ, அப்பொழுதெல்லாம் அதனை மவுனமாக தூக்கி எறிவதுதான் தமிழக மரபு. அதை இப்பொழுதும் உணர்த்தி நிற்கின்றது மரபு
தேர்தல் காலத்தை தவிர மற்ற நேரங்களில் தமிழர்கள் விழிப்பாகத்தான் இருக்கின்றார்கள்
உதவிகரம் நீட்டுபவர்களை நினைத்து பெருமை அடைவோம், அவர்களை வாழ்த்துவோம்
நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு ரூ 1000 வழங்கபடும் : முதல்வர் அறிவிப்பு
வோட்டுக்கு 1000 கொடுத்த அந்த சிந்தனை ஆட்சிக்கு வந்தால் மட்டும் நீங்குமா? நீங்காது.
இப்படி எல்லாம் அலைகழிக்கின்றார்களே, இப்படி எல்லாம் துரோகம் இழைக்கின்றார்களே என்ற கோபமோ, மத்திய அரசு மீது கண்டிப்போ ஒன்றுமில்லை
அவசர மாற்று ஏற்பாடு என எதுவும் சொல்ல தெரியவில்லை
இந்த அரசு இருக்கும்வரை வெளிமாநிலம் என்ன? வெளிநாட்டில் கூட சென்று தேர்வு எழுதுங்கள் மத்திய அரசு அசால்ட்டாக சொல்லும்
தமிழருக்கு வழிகாட்ட இங்கு அனுபவம் வாய்ந்த நல்ல தலைவர் இல்லை என்பதும், இருக்கும் கட்சிகளுக்குள்ளும் சுயநல போட்டி நடக்கின்றது என்பதும் வெளிச்சமாக தெரிகின்றது
அவசரத்திற்கு ஆட்டோவில் சென்றார் வைகோ : செய்தி
அவர் கள்ளதோணியிலே விசா இன்றி அடுத்த நாட்டுக்கு சென்றவர், பெர்மிட் ஆட்டோ எல்லாம் ஒரு விஷயமா?