நீட் போராட்டம் கல்வி வியாபாரிகள் வயிற்றில் அடித்ததால் ஏற்பட்ட ஒப்பாரி

ஒரு வழியாக நீட் வெளிமாநில சர்ச்சையும் அடிபட்டு போயிற்று, மிக குறைந்த எண்ணிக்கை அதுவும் ஆங்கில வழி மாணவர்களே வெளிமாநிலங்களுக்கு செல்கின்றார்கள்

அதற்குள் 10000 மாணவர்கள் கிளம்ப வேண்டும் என கதைகட்டி விட்டுவிட்டனர் படுபாவிகள்

இந்த மிகசிறிய எண்ணிக்கையினை ஒரு விமானத்திலே அனுப்பிவிடலாம், அரசு அதனை செய்யலாம்

ஆனால் ஆங்கில வழியில் லட்சணக்கில் செலவழித்து படிப்பவர்களுக்கு அவர்களால் அனுப்ப முடியாதா?

இங்கு காவேரி , ஸ்டெர்லைட் , மீத்தேன் தவிர‌ எல்லா போராட்டங்களும் வெற்று பலூன்கள் என்பது மட்டும் புரிகின்றது

அதுவும் நீட் போராட்டம் என்பது இந்த கல்வி வியாபாரிகள் வயிற்றில் அடித்ததால் ஏற்பட்ட ஒப்பாரி என்பது மகா உண்மை.


மீன் கறிகலந்து சோறு உண்பதுதான் சிற்றின்பம்.

அப்படி உண்டுவிட்டு மல்லாக்க கிடப்பதன் பெயர்தான் பேரின்பம் என் மனதிற்குள் ஒரு சித்தர் சொல்லி கொண்டிருக்கின்றார்