உருக வைக்கும் தலைவி குஷ்புவின் பேட்டி
தலைவி குஷ்புவின் பேட்டி சில இடங்களில் உருக வைக்கின்றது, தன் இளமை காலத்தை குடும்ப பின்னணியினை கொஞ்சமும் மறைக்காமல் சொல்ல பெரும் பக்குவம் வேண்டும், அதுவும் சினிமா வாழ்வின் சர்ச்சை பக்கங்களையும் அவர் மறைக்கவில்லை
பெரும் ஞானிகளுக்கு உள்ள பக்குவம் அது, தலைவிக்கும் இந்த இளம் வயதில் வந்திருப்பது ஆச்சரியம்
தான் சினிமாவிற்கு வந்த கதையினை கொஞ்சமும் மாற்றாமல் மறைக்காமல் சொல்கின்றார், ரசிகர்கள் பற்றி கேட்கும்பொழுது அவர் முகத்தில் பெரும் புன்னகை வருகின்றது
பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார், சில இடங்களில் அழ வைத்தார், பல இடங்களில் தனக்கு உதவிய எல்லோரையும் மறக்காமல் சொன்னார்
அந்த நன்றிமிக்க மனம் வாழ்த்துகுரியது
தன்னை கோர்ட்டுக்கு இழுத்த கதையினை அவர் சொன்னபொழுது ரத்தம் கொதித்தது, அவரை அப்படி இழுத்தவர்களை சும்மா விட கூடாது என சங்கம் முடிவெடுத்துவிட்டது
தன்னை நிரூபித்து அவர் வெளிவந்து அரசியலில் வந்த கதைகளை சொன்னபொழுது கைதட்டலாம்
ஜெயலலிதாவினை அவர் எவ்வளவு கவனித்து ரசித்திருக்கின்றார் என்பது புரிகின்றது, அந்த அடிமைகளுக்கு கூட அந்த அளவு ஜெயா பற்றி தெரியாது.
கலைஞரை தந்தை என சொன்னபொழுது கண்கள் கலங்கிற்று. தந்தை பாசமின்றி வளர்ந்த அவருக்கு அவர் அப்படி தெரிந்ததில் ஆச்சரியமில்லை
திமுக பற்றியும் அவர் வெளிவந்த கதைகளையும் கண்ணியமாக கடந்து சென்றார்
அவரின் பேட்டி முடியும்பொழுது அவரின் வாழ்க்கை புத்தகத்தை படித்தது போலிருந்தது
பேட்டி முடிந்தவுடன் சங்கம் எடுத்த முடிவுகள் இரண்டு
முதலில் இதே போல் சங்கம் சார்பாக ஒரு பேட்டி எடுத்து அதில் இன்னும் அவரைபற்றி பல விஷயங்களை உலகிற்கு கொண்டு வர வேண்டும்
இரண்டாவது தலைவிக்கு பிடிக்காத அந்த இட்லியினை தமிழகத்தை விட்டே விரட்ட வேண்டும்
இந்த பேட்டியில் ஒரே ஒரு குறைதான், எங்கள் தலைவியினை நிற்க வைத்தே பேட்டி எடுத்த அந்த தொகுப்பாளரை வன்மையாக கண்டிக்கின்றோம்
அவரை தங்க சிம்மாசனத்தில் அமர வைத்தல்லவா இந்த பேட்டி நடந்திருக்க வேண்டும்
அந்த தொகுப்பாளர் உடையினை பார்த்தீர்களா? காவி.
அதனால்தான் அந்த பாவி தலைவியினை அமரவிடாமல் நிற்க வைத்து அவமானபடுத்தியிருக்கின்றார்
இது காவி பயங்கரவாதம் , காவி பழிவாங்கல்,
இதனால் சங்கம் அவரை மகா தீவிரமாய் தேடிகொண்டிருக்கின்றது, எங்கள் தங்க தலைவியினை எப்படி நிற்க வைக்கலாம்?
விட மாட்டோம்
அவர் எஸ்வீ சேகர் போல உடனே தலைமறைவாகிவிடுவது நல்லது