மாலை சூடி என்ன செய்கின்றார்கள்
அன்று வந்ததும் அதே நிலா.. லல்லல்லா..
…
இன்று வந்ததும் அதே நிலா.. லல்லல்லா..
என்றும் உள்ளது ஒரே நிலா..லல்லல்லா..
எல்லோர் கண்ணிலும் ஒரே நிலா….
மணல் கொள்ளை இன்னும் நெல்லைபகுதியில் அமோகமாக நடக்கின்றது
நேற்று கூட காவலர் ஒருவர் மணற்கொள்ளையர்களால் கொல்லபட்டிருக்கின்றார்
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கெட்டு கொண்டிருக்கும்பொழுது ஜெயா மணிமண்டப நிகழ்வில் முதல்வர் மூழ்கியிருக்கின்றார்
காவல்துறைக்கும் அவர்தான் அமைச்சர்
காவலரே அடித்து கொல்லபட்டிருக்கும் பொழுது முதலமைச்சர் ஜெயலலிதாவிற்காக அழுதுகொண்டிருக்கின்றார்
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மிக மிக மோசமாகி காவலரையே கொல்லும் அளவிற்கு சென்றாயிற்று
இன்னும் சில இடங்களில் பெண் தாசில்தான் மணல் மாபியாக்களால் மிரட்டபட்டு கலெக்டரிடம் கதறும் காட்சிகள் நடக்கின்றன
காவலர் பிணத்திற்கு மாலையிட்டு அத்துறையும் குடும்பமும் ஊரும் கலங்கி நிற்க, இங்கு இந்த இரு பொறுப்புக்களும் மாலை சூடி என்ன செய்கின்றார்கள் என்பதை பாருங்கள்
எவண்டா இது பெரியார் மண்ணுண்ணு திரும்ப திரும்ப சொல்றது?
ஆற்றுமணல் , தாதுமணல் போல் பெரியார் மண்ணையும் எப்பொழுதோ விற்றாயிற்று
இப்பொழுது இது யாகசாலை மண்
மாலையும் கழுத்தையும் பார்த்தால் இன்னும் 10 ஆண்டுகளில் பெங்களூர் சிறை பாக்கியமோ இல்லை அப்பல்லோ மர்ம அறை பாக்கியமோ பன்னீருக்கும், பழனிச்சாமிக்கும் கிடைக்கும் போலிருக்கின்றது