ராக்கெட் ராஜா என்பவர் கைது செய்யபட்டார் என செய்திகள் வருகின்றன
ராக்கெட் ராஜா என்பவர் கைது செய்யபட்டார் என செய்திகள் வருகின்றன
தென்னகத்தில் சாதிவெறி அதிகம், அதனை வைத்து சில ரவுடிகளை உருவாக்கி காரியம் சாதிப்போர் அதிகம்
இது 1980களில் நெல்லையில் தொடங்கியது, தொடங்கி வைத்தது யாரென்றால் அரசியல்வாதிகள், அதன் பின்பு தொழிலதிபர்கள்
செல்வின், ஜாண் பாண்டியன், முத்துலிங்கம் என தென்னகத்தை மிரட்டிய ரவுடிகள் எல்லாம் இப்படித்தான் உருவானார்கள். வெங்கடேச பண்ணையாரும், பசுபதி பசுபதி பாண்டியனும் தங்கள் சொந்த பகையினை சாதியில் புகுத்தி ரத்த ஆறு ஓட வைத்தார்கள்
நாடார்களின் காவலனாக காராத்தே செல்வினும் முத்துலிங்கமும் அறியபட்டார்கள், இருவரும் கொல்லபட்டபின் அந்த இடத்தை வெங்கடேஷ் பண்ணையாரால் நிரப்ப முயற்சிகள் நடந்தன
அது பண்ணையாருக்கு தேவையும் பட்டது, ஒரு கட்டத்தில் அவரும் நான் ரவுடி இல்லை என காட்ட ஜெயா அருகில் எல்லாம் நின்றார், சாத்தான்குள இடைதேர்தலில் உழைத்தது வெங்கடேசரே
பின் அவரும் அதே ஜெயா அரசால் கொல்லபட்டார், அவரின் கூட்டாளிகள் பசுபதி பாண்டியனையும் கொன்றனர் எல்லாம் முடிந்தது
இந்நிலையில் யாரேனும் ஒருவர் நாடார்குல ரவுடியாக இருந்தே தீரவெண்டும் என்ற நிலையில் உருவாக்கபட்டவர்தான் ராக்கெட் ராஜா
அவன் செல்வின், வெங்கடேசன் என எல்லா முகாமிலும் இருந்தவர், தலைவர்கள் இல்லா நிலையில் அவரே தலைவரானார்
இவருக்கு ஆதராவக நாடார் சங்கங்களும், இன்னும் சில பத்திரிகைகளும் இருப்பது ரகசியமல்ல, சில மாதங்களுக்கு முன்பு இவர் என்னை என்கவுண்டர் செய்ய போகின்றார்கள் என கதறியதும், நாடார் சங்கம் போராட்டம் நடத்தியதும் உலகறிந்தது
ஏராளமான வழக்குகள் இருந்தும், தலைமறைவு வாழ்க்கை இருந்தும் தெற்கே காமராஜர் சிலை விழாக்களில் எல்லாம் திடீரென ராக்கெட் ராஜா வருவார், போலிசும் பார்த்துகொண்டிருக்கும்
எந்த போலிசும் அவரை கைது செய்யவில்லை, ஆனால் அவர் போன பின்பு தேடுவார்கள்
எப்பொழுதுமே அரசுக்கும் அவருக்கும் காவல்துறைக்கும் ஒரு புரிந்துணர்வு இருந்தது, பல சக்திகள் அவரை காத்தன
இப்பொழுது அவர் கைது என்கின்றார்கள்
நிச்சயம் கைதாக வாய்ப்பில்லை, பேரம் எல்லாம் பேசி இலங்கையில் கேபி சிங்களரிடம் பாதுகாப்பாக கைதானது போல சரண்டராகி இருக்கலாம்
இங்கு சில கண்கள் அசையாமல் யாரும் ரவுடிகள் கைது செய்யபடுவதில்லை
எங்கோ பேரம் நடந்திருக்கின்றது, காட்சி அரங்கேறிற்று
இனி தென்னகத்தில் சிற்சில சம்பவங்கள் நடக்கலாம், சில சில்லறைகள் குதிக்கலாம்., நாடார் சங்கங்கள் எல்லாம் போர்கொடி தூக்கலாம்
அவர்களை அடக்கி சட்டம் தன் கடமையினை செய்யட்டும், சமூகம் அமைதியாய் வாழட்டும்
இனி சாதிய ரவுடிகள் தலையெடுக்காமல் போகட்டும்.
நெல்லையில் மணற்கொள்ளையில் காவலர் கொல்லபட்ட நிலையில் ராக்கெட் ராஜா அவசரமாக கைது செய்யபட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது
அகபட்டவன் எவனும் “எலேய் போலிசு, நான் ராக்கெட் ராஜா ஆளுலே, என் மேல கைய வச்சா திருநெல்வேலி ஏரியாவே அலறும்ல, அண்ணன் சும்மா இருக்க மாட்டார்ல.. ” என சொலிவிட்டானோ என்னமோ?