இருட்டு அறையில் முரட்டு குத்து
இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம் சர்ச்சையாகின்றது, சினிமாக்காரர்களே காரி துப்புகின்றார்கள் என்றால் படம் எப்படி இருக்கும் என்பதை யூகிக்க முடிகின்றது
இதற்காகவெல்லாம் அந்த படத்தை பார்க்கும் எண்ணமில்லை, கலாச்சாரத்தை காக்கும் பொறுப்பு அவர்களுக்கு மட்டும்தான் இருக்கின்றதா? நமக்கும் உண்டு
வழக்கமாக இந்தமாதிரி சர்ச்சைகளில் சிம்புதான் சிக்குவார்
அருமையான படம் போய்விட்டது என வருந்துகின்றாரா இல்லை தப்பிவிட்டோம் என மகிழ்கின்றாரோ என தெரியவில்லை
அன்னார் வருத்ததில் இருக்கவே வாய்ப்பு அதிகம்
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் இரட்டை அர்த்த வசனம் என பாரதிராஜா பாய்ச்சல்
பதினாறு வயதினிலே முதல் அலைகள் ஓய்வதில்லை , கிழக்கே போகும் ரயில் என பல படங்களில் அன்னார் மிக கட்டுபாடாக வசனங்களையும் பாடல்களையும் காட்சிகளையும் வைத்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது
இரட்டை அர்த்த காட்சிகளை அறிமுகபடுத்தியதே இவர்தான்
முதல்மரியாதை படத்து பாடல்களில் பல வரிகள் மகா சர்ச்சையானவை, பின் மாற்றபட்டவை
இரட்டை அர்த்த வசனத்தையும், பாடலையும் கிராமத்து யதார்த்தம் என அறிமுகபடுத்தியவர்தான் இன்று இந்த படத்தை சாடுகின்றாராம்
சமூக வலைதளங்களில் அரசியல் கட்சிகளை விமர்சிக்க வேண்டாம் – ரசிகர்களுக்கு ரஜினி அறிவுரை
பின்னே? எல்லா கட்சிக்காரனும் ரஜினியின் படம் பார்க்க வரவேண்டுமா வேண்டாமா?