பிராமண எதிர்ப்பு, நாத்திகம் இனி எடுபடாத விஷயங்கள்…

பிராமண எதிப்பு , பிராமண ஒழிப்பு, பிராமண ஆதிக்க தகர்ப்பு என என்னவெல்லாமோ சொல்லி கொண்டிருக்கின்றார்கள்

ஒருவேளை திராவிட நாடு அடைந்திருந்தால் ஹிட்லரின் கொடுமைகள் இங்கும் நடந்திருக்கும் போல‌

இவர்களிடம் தனி நாடு சிக்கினால் உடனே எல்லா பிராமணரையும் விரட்டிவிடுவார்களா?

இவர்கள் உருவாக்கும் சித்திரத்தை கண்டால் சாதிக்கொரு நாடு கொடுக்காமல் பிரச்சினை தீராது போல‌

இலங்கையில் என்ன சிக்கல்?

பெரும்பான்மை சிங்களனுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தது தவறாம், திறமை அடிப்படையில் யாழ்பாணத்தானுக்கு கல்வி, வேலை என கொடுக்க வேண்டுமாம்

ஈழசிக்கல் இங்குதான் தொடங்கிற்று

தன் பெரும்பான்மை இனம் தாழகிடப்பதை கண்ட சிங்கள அரசு அவர்களை கைதூக்கிவிட பல இடஒதுக்கீட்டை கொண்டுவந்தது, அதுதான் ஈழமாணவர்களை பாதித்து துப்பாக்கி ஏந்த வைத்தது

அந்த சிங்களின் திட்டத்தை சாடி எல்லா மக்களும் இலங்கை குடிமக்களாக நடத்த வேண்டும் என கண்டித்துவிட்டு, இங்குமட்டும் இட ஒதுக்கீடு வேண்டும் பிராமணன் விட்டால் எல்லாவற்றையும் அபகரிப்பான் என கரித்துகொட்டுகின்றார்கள்

சிங்களன் செய்தால் இனவெறி, இவர்கள் தமிழகத்தில் செய்தால் சீர்திருத்தம்

வெறுப்பு அரசியலை வளர்த்த தேசம் எதுவும் உருபட்டதாக சரித்திரமே இல்லை. தமிழகம் இப்பொழுது அப்படித்தான் சீரழிந்துகொண்டிருக்கின்றது

பிராமண எதிர்ப்பு, நாத்திகம் இதெல்லாம் இனி எடுபடாத விஷயங்கள். மாறிவிட்ட காலங்கள்

அதைவிட்டு வேறு விஷயங்களில் அரசியல் செய்தால் சில கட்சிகளின் எதிர்காலத்திற்கு நல்லது

அமைதியான எதிர்காலத்திற்கு இன்னும் நல்லது.

இல்லையெனில் காலம் பல விஷயங்களை உணர்த்தும்