அண்ணே உங்களுக்கு பிராமண கொடுமை தெரியாது….
“அண்ணே உங்களுக்கு பிராமண கொடுமை தெரியாது, சூத்திரன் படித்தால் அவன் காதில் ஈயத்தை ஊற்றுமளவு மனுநீதியினை பின்பற்றும் கொடியவர்கள்
அப்படியா
ஆமாம், அடுத்தவனை படிக்கவே விடமாட்டார்கள், நாசமாய் போனவர்கள். உனக்கு அதெல்லாம் தெரியாது.
அம்பேத்கர் தெரியுமா?
தெரியும், தலித்தாக பிறந்து சட்டமேதையாக உயர்ந்தவர்
அது பீமாராவ்
அம்பேத்கர் யார்?
பீமாராவ் எல்லாம் இல்லண்ணே, அவர்தான் அம்பேத்கர்
அம்பேத்கர் என்பது பீமராவ் எனும் தாழ்த்தபட்டவனுக்கு பாடம் நடத்திய பிராமண ஆசிரியர். அந்த நன்றிகடனுக்குத்தான் பீமராவ் அந்த ஆசிரியர் பெயரை தனக்கு சூட்டினார்.
அப்படியாண்ணே
பின்ன, அம்பேத்கருக்கு தொடக்க கல்வி கொடுத்தது பிராமணன், காதில் ஈயம் எல்லாம் ஊற்றவில்ல்லை
இல்லண்ணே பொய் சொல்றீங்க
அப்துல் கலாம் தெரியுமா?
ஆமாண்ணே மீன்பிடிக்கிற குடும்பம், அவர் படிச்சி விஞ்ஞானி ஆகி ஜனாதிபதி ஆயிட்டாரு
அவரோட வாழ்க்கை புத்தகம் படிச்சிருக்கியா? தன் ஆசிரியர்கள்ன்னு நிறைய பிராமணர நன்றியோட சொல்லியிருப்பார்
ஆமாண்ணே
பின்ன ஏண்டா பிராமணன் ஈயத்தை ஊத்தினான், பித்தாளைய ஊத்தினான்னு பொய்?
ஹிஹிஹி இங்க சொல்லிகிட்டாங்கண்ணே, இது பெரியார் மண்ணுண்ணே
அடேய் பெரியாருக்கே ராஜாஜின்னு ஒரு பிராமணர்தாண்டா நண்பர் ஆலோசகர் எல்லாம், மணியம்மை கல்யாண சிக்கலுக்கு கூட அவர்கிட்டதான் ஆலோசனை கேட்டார்
அப்படியாண்ணே, பிராமணன் எல்லாம் சுரண்டுரவங்க, பணக்காரங்க.
ராஜாஜி கிட்ட சட்ட ஆலோசனை பீஸ் கொடுத்து கேட்டிருப்பார்ணே
டாட்டா யார்டா?
பார்சிண்ணே
பிர்லா யாருடா?
தெரியலண்ணே
அம்பானி யார்டா?
பிராமணன் இல்லண்ணே
ஓடிபோன மல்லையா, நீரவ் மோடி எல்லாம் யார்டா?
பிராமணன் இல்லண்ணே
செட்டிநாட்டு அரசர்கள் மாதிரி ஒரு பிராமணன் சாம்ராஜ்யத்தை காட்டுடா பார்க்கலாம்?
ஆமாண்ணே அப்படி யாரும் இல்லண்ணே
பின்னே எங்கடா பிராமணன் சுரண்டி பணக்காரன் ஆனான், ஒரு பிராமண ஜமீந்தார காட்டு பார்க்கலாம்
ஹிஹிஹி தேடி பிடிச்சுச்சு வாரேண்ணே,
இங்க பிராமணர் ஏழை வாத்தியாரா இருந்து பலருக்கு கல்வி எல்லாம் கொடுத்திருக்காங்க, சும்மா அவன் சொன்னான், மனு சொன்னான்னு வந்த மவனே வாயில ஈயத்த காய்ச்சி ஊத்திருவேன், ஓடுடா..”