டிரம்பினை இஸ்ரேல் முட்டாளாக்குகிறதாம்…

No automatic alt text available.

கலககாரனை அருகில் வைக்காதே, அவன் உன்னை எங்காவது சண்டைக்கு இழுத்துவிடுவான் என்பது ஒரு பழமொழி

இது இந்த டிரம்ப் என்பவருக்கு தெரியவே இல்லை, மிக மோசமான காரியம் ஒன்றை இஸ்ரேல் எனும் கலகக்காரன் தூண்டிவிட இவர் செய்துவிட்டார்

ஈரானின் அணுசக்தி ஒப்பந்த்திலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார், இது பல நெருக்கடிகளை அரேபியாவில் கொண்டுவரும்

ஈரானின் அணுசக்தி கண்காணிப்பு உரியது என்றும், அதற்கு ஈரான் ஒத்துழைக்கும்பட்சத்தில் அதன் மேல் பொருளாதார தடை நீக்கபடும் என ஒபாமா முன்பு பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா போன்ற நாட்டாமைகள் முன்னிலையில் சமரசம் செய்திருந்தது

இது நடைமுறைக்கும் வந்து அமைதி காக்கபட்டது

இப்பொழுது ஈரான் அணு ஆராய்ச்சி ஏதும் செய்யா நிலையிலே மறுபடியும் டிரம்ப் அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகி மறுபடியும் பொருளாதாரா தடை என சொல்லவருகின்றார்

விஷயம் அணுசக்தியா என்றால் இல்லை

சிரியாவில் ஈரானின் கை ஓங்கி விட்டது, ஏமனில் ஈரானின் கரம் இருக்கின்றது, இது சவுதிக்கு பிடிக்கவில்லை, சிலநேரம் சவுதி அரண்மனை மீதே ஏமனின் ஈரானிய கனைகள் பாய்கின்றன‌

இஸ்ரேல் , சவுதி, அமெரிக்கா என பல நாடுகளின் முக்கிய எதிரியாய் ஈரான் இருப்பதும், அது பலம்பெற்று வருவதும் அமெரிக்க கூட்டணிக்கு சரியாக படவில்லை

இதனால் சதாம் உசேனை கொன்ற அந்த அழிவு ஆயுதம் எனும் பல்லவியினை பாட ஆரம்பித்தாயிற்று

ஈரானும் ஒப்பந்தம் முறிந்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என எச்சரித்துகொண்டே இருந்தது

இனி காட்சிகள் மாறலாம்

இது சம்பந்தமாக ஒபாமாவே அதிருப்தி தெரிவித்துவிட்டார், அமெரிக்காவிலும் எதிர்பு வருகின்றது

டிரம்பினை இஸ்ரேல் முட்டாளாக்கி வருவதாக பலர் கண்டிக்க தொடங்கியாயிற்று