நம்பியாற்றை காக்க உயிர்விட்ட காவலருக்கு அஞ்சலி

இயற்கையினை காப்போம், மண் கொள்ளையினை தடுப்போம் என முழக்கமிட்ட பலரை, நெல்லை நம்பியாற்று மணற்கொள்ளையினை தடுக்க சென்று கொல்லபட்ட காவலர் விஷயத்தில் காணவே இல்லை

இதுவே போலிஸ் மோதலில் ஒருவர் கொல்லபட்டிருந்தால் , காவல்துறை அராஜகம் என கிளம்பியிருப்பார்கள்

மனித உரிமை கமிஷன், கழுதை உரிமை பேரவை எல்லாம் பொங்கி தீர்த்திருக்கும்

ஆனால் காவலர் கொடூரமாக கொல்லபட்ட நிலையில் ஏதும் சத்தமில்லை

அன்று திருச்சியில் கர்பிணியினை மிதித்துகொன்றார் காவலர் என பொங்கினார்கள், இதோ இந்த கொல்லபட்ட காவலரின் மனைவி 5 மாத கர்ப்பிணி

ஏன் எல்லோரும் அமைதி?

தோண்டினால் சாதி முதல், யாருக்காக மணல் கடத்தினான் என பல சர்ச்சைகள் வரும் என்பதால் அமைதி

இங்கு எல்லாமே நாடகம்

நம்பியாற்றை காக்க உயிர்விட்ட அந்த காவலருக்கு அஞ்சலிகள், அந்த ஆற்றங்கரை வாழ் தெய்வங்கள் எல்லாம் அக்குடும்பத்தை காத்து நிற்கட்டும்

தாய் மண்ணை காக்க எல்லையில் சாகும் வீரரை போல ஆற்று மண்ணை காக்க காவலரை சாககொடுக்கும் நிலைக்கு வந்து விட்டதுதான் இங்கு ஆட்சியில் ஏற்பட்டிருக்கும் அவலமான‌ வீழ்ச்சி.

இனி இம்மாதிரி கொள்ளையினை தடுக்க செல்லும் காவலருக்கு சுடும் உரிமை அளித்தே அனுப்ப வேண்டும்