காலா படத்து பாடல் சில வந்திருக்கின்றன
இந்த காலா படத்து பாடல் சில வந்திருக்கின்றன
மும்பை தமிழர்கள் கதை என சொலலிவிட்டு போராடு, கறுப்பு சட்டை போடு, எதிர், உடை, புடை, கோட்டை, படை என பாட்டெழுதினால் எப்படி இருக்கும்?
முன்பு பால்தாக்கரே ஏன் தமிழரை ஓட அடிக்க துடித்தார் என்பதன் அர்த்தம் இப்பொழுதுதான் புரிகின்றது
அது என்னவோ தெரியவில்லை பராசக்தி காலத்திலிருந்து இம்மாதிரி புரட்சி பாடல்கள் வந்து கொண்டே இருக்கின்றன
அதை கிழிப்போம், கடலை குடிப்போம், மலையினை தகர்ப்போம், எல்லோருக்கும் எல்லாம் கொடுப்போம் என ஏகபட்ட பாடல்கள்
அண்ணா, கலைஞர், ராமசந்திரன், ஜெயா என எல்லோரும் பாடி பாடி என்ன மாறிற்று என்றால் ஒன்றும் இல்லை
இப்பொழுது ரஜினி காலத்திலும் அதே இம்சை புரட்சி பாடல்
இனி 20 வருடம் கழித்து விஜயும் இதையே பாடுவார், ஆனால் ஏதும் நடக்குமா என்றால் நடக்காது
ஆனாலும் சமூக விஷயத்தை வைத்து சினிமாவில் சம்பாதிப்பது எப்படி தமிழரை விட யாரும் சொல்லிவிட முடியாது
கடந்தமுறை கபாலி வந்தபின் மகா அவசர அவசராக சோ ராமசாமியினை தியேட்டருக்கு அழைத்துவந்து தான் தலித் அபிமானி இல்லை என காட்டினார் ரஜினி
படம் பார்த்த அதிர்ச்சியில் செத்தே போனார் சோ ராமசாமி
இம்முறை யாரோ?
ஏதும் சர்ச்சை வந்து எச்.ராசா, எஸ்.வீ சேகர் போன்றோரை ரஜினி அழைத்து படம்பார்க்க வைத்து கொன்றால் எப்படி இருக்கும்?
அதனை நிச்சயம் ரஜினி செய்யமாட்டார் எனினும், பாடலை கேட்டாலே ரஜினி படாதபாடு படபோகின்றார் என்பது புரிகின்றது
நம்மை விட அங்கிள் சைமன், பாரதிராஜா கோஷ்டி பாடலை தீவிரமாக கேட்டு மனப்பாடம் செய்துகொண்டிருப்பதால் விரைவில் கடும் காமெடிகளை எதிர்பார்க்கலாம்