ரஜினிக்கு ஒரு ராசி உண்டு

தென்னக நதிகளை இணைப்பது ரஜினியின் கனவாம் அவரே சொல்லிவிட்டார்
காவேரிபற்றி ஏதும் சொன்னால் காலா படத்தை பெங்களூரில் ஓட விடமாட்டோம் என வாட்டாள் நகராஜ் சொன்னவுடனே அன்னாருக்கு தியானம் செய்யாமல் ஞானம் கிடைத்தது
மவுனவிரதம் என சமத்தாக ஒரு போராட்டம் நடத்தினார்
இப்பொழுது கன்னடத்திற்கு வலிக்காமல் தென்னக நதி இணைப்பு என்கின்றார்
உரிமை உள்ள காவேரியிலே ஒரு சொட்டு வாங்க முடியவில்லை, இதில் சம்பந்தமே இல்லா கிருஷ்ணா, துங்கபத்ரா ஆறுகளில் இருந்து நீர் பெற கனவு காண்கின்றாராம்
இவர் காண்பது ஆற்று நீர் கனவு அல்ல, மாறாக காலா படத்து வசூல் பெங்களூரில் கொட்டோ கொட்டு என கொட்டும் என்ற கனவு
கனவு காண யாருக்குத்தான் உரிமை இல்லை??
ஆக ஆன்மீக அரசியல் என்பது கனவு காண வைப்பது
ரஜினிக்கு ஒரு ராசி உண்டு, அவர் வாழ்த்திய படமும் உருப்படாது, அவர் வாழ்த்தியர்களும் விரைவில் காட்சியினை விட்டே ஓடி மறைந்துவிடுவார்கள்
தஞ்சை பெரிய கோவில் போலவே இந்த நம்பிக்கை தமிழகத்தில் நெடுநாள் உண்டு
இந்த ரஜினி ராசியில் மலேசிய முன்னாள் பிரதமரும் சிக்கி கொண்டார் என்பதுதான் மகா சோகம்
ரஜினியின் முழு பவரையும் காலா படத்தில் கொண்டுவர முயற்சித்திருக்கின்றேன் : ரஞ்சித்
அப்படி தெரியவில்லை பார்த்தால் ரஜினியினையும் தயாரிப்பாளரையும் நடு தெருவில் கொண்டுவர முயற்சித்திருப்பது போல தெரிகின்றது
இதோ தமிழகத்து கிம் ஜாங் உன் கூட அந்த முடிவினை கோடிட்டு காட்டினார்..
ரஜினியும் மோடியும் சேர்ந்தால் இங்கு ஆட்சி அமைக்கலாம் : குருமூர்த்தி
சோ ராமசாமி என இந்த குருமூர்த்திக்கு நினைப்பு? பூனை ஒரு நாளும் புலியாகாது
எங்கே இந்த வாக்கியத்தை எஸ்.வீ சேகரை கொண்டு சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம்
மோடியும் ரஜினியும் சேர்ந்தால் பாபா கோவில் அல்லது ஆசிரமம் அமைக்கலாம், 2 வோட்டு கூட வாங்கமுடியாது.