நிர்மலா தேவி விசாரணை அறிக்கைக்கு உயர்நீதிமன்றம் தடை
நிர்மலா தேவி விசாரணை அறிக்கைக்கு உயர்நீதிமன்றம் தடை
இந்தியாவில் எந்த கமிஷனுமே முடிவு சொல்லாது, மிக சில கமிஷன்களே சொல்லும்
இந்த கமிஷன் அறிக்கை வெளியிட கூடாது என்பதில் பலர் தீவிரமாக இருப்பது புரிகின்றது
இது என்னவகை தீர்ப்பு என்பதே தெரியவில்லை , சந்தாணம் தன் அறிக்கையினை கவர்னரிடம் மட்டும் தெரிவிக்க வேண்டுமாம், பத்திரிகைக்கு தர கூடாதாம். இது என்ன கவர்னர் வீட்டு தனியார் டிடெக்டிவ் ரிப்போர்ட்டா?
பெரும் மர்மம் இருப்பது புரிகின்றது
ஆனானபட்ட ராஜிவ் கொலை வழக்கிலே சிவராசன் படம் முதலில் பத்திரிகையில்தான் வந்தது, இன்னும் ஏராளம் சொல்லலாம்
ஒரு கமிஷன் விசாரித்த அறிக்கையினை வெளியே விடாதே என எப்படி சொல்லமுடியும்? இங்கு சொல்கின்றார்கள்
அன்று திருச்செந்தூர் வைரவேல் தொடர்பாக கலைஞர் நடையாய் நடந்தார், ராமசந்திரன் பால் கமிஷனை அமைத்தார்
பால் கமிஷன் தன் அறிக்கையினை ராமசந்திரனுக்கு கொடுக்கும் முன்பாகவே அட்டகாசமாக கைபற்றி பொதுவெளிக்கு கொண்டுவந்தார் கலைஞர்
அப்படிபட்ட திறமையான அரசியல்வாதிகளுமில்லை, ஒரு கமிஷன் முடிவினை பத்திரிகைகளுக்கு கொடுப்பதை தடுப்பதா என கேட்க பத்திரிகையாளருமில்லை
இத்தேசத்தின் தூண்களில் ஒன்றான நீதிதுறையும், பத்திரிகை துறையும் தங்கள் மாண்பினை இழக்கின்றன
ஒருவித சர்வாதிகார காட்டாட்சிக்கு இத்தேசம் செல்வது தெரிகின்றது
அறிக்கையில் ஒன்றுமில்லை என்றால் ஏன் அஞ்சுகின்றார்கள் என கேட்க இங்கு ஒருவருமில்லை