பெரியாருக்கும் காரல் மார்க்ஸுக்கும் என்ன சம்பந்தம்?

நீ பிராமண அடிவருடி என சிலர் சொல்லிகொண்டே இருக்கின்றான், அவர் யாரென படத்தை தேடினால் அதில் பெரியாரும் கார்ல் மார்க்ஸும் இருக்கின்றனர்

பெரியாருக்கும் காரல் மார்க்ஸுக்கும் என்ன சம்பந்தம்?

உலக முதலாளிகளை மொத்தமாக எதிர்த்தான் காரல் மார்க்ஸ், முதலாளிகளை தவிர்த்து பிராமண நிர்வாகிகளை மட்டும் எதிர்ததார் பெரியார்

உலக தொழிலாளர்களின் நலனுக்காக உழைத்தான் மார்க்ஸ், பெரியார் தன் கீழிருந்தவர்களுக்கு எப்படி சம்பளம் கொடுத்தார் என்பது நெஞ்சுக்கு நீதியிலே இருக்கின்றது

உலகிற்கே பொதுவான தத்துவத்தை கொடுத்தான் மார்க்ஸ்

திராவிடம் எனும் குறுகிய சிந்தனையிலே தன்னை நிறுத்தினார் பெரியார்

வாழும் காலத்தில் வறுமையில் செத்தான் மார்க்ஸ், ஆளும் வர்க்கத்தை அவன் எதிர்த்தது அப்படி

வாழும் காலத்தில் தன் சொத்துகளுக்கு பாதுகாப்பு வராமல் சமத்தாக நடந்து கொண்டவர் பெரியார்

பொதுவுடமை கனவு கண்டவன் மார்க்ஸ், பெரியாரோ தன் சொத்துக்களுக்கு வாரிசு வேண்டும் என சொல்லியே திருமணம் செய்தவர்

நடுதெருவில் பிச்சை எடுத்தாலும் தன் கொள்கையினை விடாதவன் மார்க்ஸ், தான் கம்யூனிஸ்ட் என்றால் வெள்ளை அரசு விடாது என்பதால் கருப்புசட்டை போட்டு குழப்பி கொண்டவர் பெரியார்

பெரியார் தன் திரண்ட சொத்துகளுக்காக கம்யூனிஸ்ட் ஆகவில்லை என்பது ஒன்றும் ரகசியமல்ல‌

மானிடம் வாழ அற்புத பொருளாதார சூத்திரத்தை கொடுத்தவன் மார்க்ஸ், பிராமணனை ஒழி என்பதை தவிர பெரியாரின் தத்துவம் ஏதுமில்லை

உலகம் மார்க்ஸின் தத்துவத்தால் பலனடைந்தது, பெரியாரின் கொள்கைகள் திராவிட நாடு தாண்டமுடியாதவை

பெரியார் சாதி ஒழிப்பு போராளி என்பதில் சந்தேகமில்லை, அவரின் தைரியமும் அதிசயமானது

ஆனால் மார்க்ஸ் எனும் மாபெரும் மானிடத்தை நேசித்தவருடன் பெரியாரை ஒப்பிட முடியாது

இது கூட தெரியாதனே என்னை வந்து திட்டிகொண்டே இருக்கின்றான், அவன் அறிவு அவ்வளவுதான்

போடா டேய்

எவனுக்காவது நீண்ட தாடி இருந்தால் உடனே ஒரே வரிசையில் நிறுத்திவிடுவார்கள் போல‌

விரைவில் கவிஞர் வாலிபடமும் பெரியாரோடும் மார்க்ஸோடும் இருந்தாலும் ஆச்சரியமில்லை